பெரியகுளம் அருகே வெடித்த கலவரம்: பட்டியலின சமூகத்தவரின் தெருக்களை எரித்து இஸ்லாமிய அமைப்புகள் வெறிச் செயல்!

bomminayakkanpatti theni1 - 2026

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டியில் பட்டியலின சமூகத்தினரை குறிவைத்து, அவர்களின் கடைகள், வர்த்தக இடங்கள், வசிப்பிடங்கள் வீடுகளைக் குறிவைத்து இஸ்லாமிய அமைப்புகள் ஒன்று சேர்ந்து வெறித் தனமாகத் தாக்கியதால், கலவரம் வெடித்தது. இதனால் அப்பகுதி போர்க்களம் போல் காட்சியளிக்கிறது. பாதுகாப்புக்காக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

பொம்மிநாயக்கன்பட்டியில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த வள்ளியம்மாள் என்பவரது உடலை, இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்களின் தெரு வழியாக எடுத்துச் செல்ல முயன்றபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து இரு சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு இடையே வாக்குவாதம் மூண்டது.

bomminayakkanpatti theni2 - 2026

இதன் பின்னர் இஸ்லாமிய அமைப்புகள் அங்கே சமூக விரோதிகளை ஒன்று திரட்டினர். தொடர்ந்து, பட்டியலின சமூகத்தவரின் கடைகள், ஆட்டோ, பைக் ஆகியவற்றுக்கு தீ வைத்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து அறிந்து விரைந்த காவல்துறையினர் கலவரத்தைக் கட்டுப்படுத்த முயன்றனர். முடியாத சூழலில், தேனி நகரத்தில் இருந்து இருநூறுக்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டு தற்போது நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

கலவரப் பகுதிகளை தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் நேரில் ஆய்வு செய்தார். அதைத் தொடர்ந்து, திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி ஜோசி நிர்மல்குமார் நேரில் ஆய்வு செய்து நிலைமையைக் கேட்டறிந்தார். எரிக்கப்பட்ட வாகனங்கள் கடைகளை தீயணைப்புத்துறையினர் அணைத்தனர். தற்போது நிலைமை கட்டுப் படுத்தப்பட்டிருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

bomminayakkanpatti14 - 2026

மீண்டும் கலவரம் வெடிக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒவ்வொரு தெருவிலும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories