எஸ்.வி.சேகர் மேல் நடவடிக்கை எடுக்க மேலிடத்துக்கு தமிழிசை பரிந்துரை!

Published:

06 May 11 Tamil - 2026

சென்னை: தலைமறைவாக உள்ள பாஜக., நிர்வாகி எஸ்.வி.சேகர் மீது கட்சி ரீதியான நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. எஸ்.வி.சேகர் மேல் நடவடிக்கை எடுக்குமாறு கட்சி தலைமைக்கு பரிந்துரைத்துள்ளதாக மாநில பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்களிடம் பேசிய போது, ”எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்க கட்சி தலைமைக்கு பரிந்துரைத்துள்ளோம். இந்தப் புகார் பாஜக., ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் விசாரணையில் உள்ளது.

எஸ்.வி.சேகர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும். குழுவின் பரிந்துரை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.

முன்னதாக, மோடிக்கு ராகுல் சிம்ம சொப்பனமாக இருப்பதாகக் கூறும் திருநாவுக்கரசர் தூக்கத்தில் உள்ளார் என்றும், கர்நாடக காங்கிரஸ் அரசு தமிழகத்திற்கு எந்த உதவியும்செய்ய வில்லை என்றும் கூறிய தமிழிசை, ஸ்டெர்லைட் ஆலையை மூட உச்ச நீதிமன்றத்திற்குதான் அதிகாரம் உள்ளது என்று கூறினார்.

ALSO READ:  சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img