தமிழகத்தின் வருங்கால அபாயங்கள்: கமலஹாசனின் வன்முறையைத் தூண்டும் டிவிட்!

Published:

04 May 23 Kamal - 2026

மக்களுக்கான அரசியலை முன்னெடுப்பதாகக் கூறிக் கொண்டிருக்கும் நடிகர் கமலஹாசன், தனக்கே புரியாமல் பேசிக் கொண்டிருப்பதை பொது வெளியில் விட்டு மக்களிடமும் கருத்துப் புயலாக வெளிப்பட மெனக்கெடுவார்.

இப்போது, நாட்டில் மிகவும் கொந்தளிப்பான சூழல் நிலவும் போது, பதட்டத்தைத் தணித்து, பொறுப்பான தலைவராகக் காட்டிக் கொள்ளாமல் மேலும் மேலும் அப்பாவிப் பொதுமக்களை உசுப்பி விடும் வகையில் புரட்சி வெடிக்கும், அதை எதிர்கொள்ளும் திறன் அரசுக்கு இல்லை என்றெல்லாம் கருத்துப் பதிவிட்டுள்ளார். அத்துடன், கர்நாடகாவுக்கு ஓடிச் சென்று, காவிரி நீரைத் தரமாட்டேன், மழை பெய்தால் தண்ணீர் தானாக வரும் என்றெல்லாம் தமிழனை கேவலப் படுத்திச் சென்ற குமாரசாமியின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ளச் சென்ற கமல்ஹாசன், இங்கே புரட்சி வெடிக்கும் என்று மீண்டும் மீண்டும் உசுப்பி விட்டுள்ளார்.

இப்படிப்பட்ட சமூக அந்தஸ்துள்ள, ஆனால் பொறுப்பற்ற நபர்களின் பேச்சைக் கேட்டு மேலும் கலவரங்கள் வெடிக்கக் கூடாது என்பதால்தான், தமிழக அரசு காஷ்மீரில் நிலவுவதைப் போல், இப்படி இண்டர்நெட் இணைப்பை மூன்று மாவட்டங்களில் துண்டிக்கும் அளவுக்கு வந்திருக்கிறது.

கமல்ஹாசன் போட்ட டிவிட்டர் பதிவு…

ALSO READ:  சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

தூத்துக்குடியில் இணையம் துண்டிப்பா?அடுத்து என்ன தமிழர்களை சாதி விலக்கிவைப்பீர்களா?சரித்திரம் காணாத புரட்சி வெடிக்கும்.மக்களின் வலிமையை எதிர் கொள்ளும் பலம் எந்த அரசுக்கும் இல்லை.அதுவும் இந்த அரசுக்கு இல்லவே இல்லை!

 

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img