இணையதள சேவைகள் முடக்கம்: நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்ட மக்கள் தவிப்பு!

Published:

09 May 23 TN secrateryate - 2026

தூத்துக்குடியில் ஏற்பட்டுள்ள கலவரம் நெல்லைக்கும் பரவியதால், தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் தகவல் தொழில்நுட்பம், இணையத்தள சேவைகளை முடக்குமாறு தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. இதை அடுத்து, மூன்று மாவட்டங்களிலும் இணையதள சேவைகள் முடங்கின.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் வன்முறைக் காட்சிகள், காவல்துறையினரின் தடியடி, துப்பாக்கிச் சூடு, வாகனங்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டது உள்ளிட்ட பல்வேறு கலவரக் காட்சிகளை, திரித்தும் பொய்களை ஏற்றியும், வன்முறையைப் பரப்பும் நோக்கத்தில் சமூக வலைத்தளங்கள் வழியாக பரப்பப் பட்டு வருகின்றன. இவற்றைக் காணும் மக்களிடம் மேலும் பீதி பரவி வருகிறது.

இத்தகைய கருத்துப் பரவலாக்கத்தால் வன்முறை மேலும் பரவும் என அச்சம் எழுந்துள்ளது. இதை அடுத்து, இந்த மூன்று மாவட்டங்களிலும் அமைதி திரும்பும் வரையில் தகவல் தொழில்நுட்பம், இணையதளச் சேவைகளை முடக்குமாறு தமிழக அரசு ஆணை பிறப்பித்தது.

இது குறித்து மாநில உள்துறை அமைச்சகம் 3 மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவு அனுப்பி வைத்தது. இதை அடுத்து, இன்று இரவு 8 மணி முதல் இணையத்தளச் சேவைகள் முடக்கப்பட்டன. மொபைல் நெட்வொர்கின் டேடா சேவை, தரைவழி பிராட்பேண்ட் டேடா சேவை ஆகியவை நிறுத்தப் பட்டுள்ளன. இவற்றில் வாய்ஸ் கால்ஸ் எனப்படும் குரல் வழி சேவை மட்டுமே தொடர்ந்து கிடைக்கும்.

ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை சந்தித்துள்ளனர். வங்கிக் கணக்குகள், பண பரிவர்த்தனை முதல் பல்வேறு நிதி தொடர்பான பரிவர்த்தனைகளும் மொபைல் வழியேயும், இணையம் வழியேயும் நடத்தப் படுவதால் அந்த சேவைகளும் முடங்கியுள்ளன. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமத்தை சந்திக்கின்றனர்.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img