குற்றாலம் வாங்க; குளிக்கலாம் நீங்க! ஆர்ப்பரிக்கும் அருவிகளில் குளிக்க தடை நீக்கம்!

 

courtallam falls may29 - 2026
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ந்து பெய்யும் கன மழையால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அம்பாசமுத்திரம் அகத்தியர் அருவி மற்றும் மணிமுத்தாறு அருவியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் குற்றால அருவிகளில் தடை நீக்கப்பட்டது.

நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர் பகுதிகளில் நேற்று முந்தினம் இரவு முதல் தென் மேற்கு பருவ மழை தொடங்குவதற்கு அறிகுறிகள் தென்பட்ட நிலையில் விடிய விடிய சாரல் மழை பெய்து வருகிறது. இந் நிலையில் சாரல் மழை காரணமாக தென்காசி, செங்கோட்டை, உள்ளிட்ட வட்டாரப் பகுதிகளில் அக்னி நட்சத்திரம் முடிவு காலமான நேற்று தட்ப வெப்ப நிலை மாறி முழுமையாக குளுமையான சூழல் நிலவியது.

தொடர்ந்து சாரல் மழையோடு கூடிய பலத்த காற்றும் வீசியதில் செங்கோட்டை பகுதிகளில் நேற்று இரவு சில இடங்களில் மரம் சாய்ந்து மின் தடை ஏற்பட்டது. இதே போல குற்றாலம் வனப் பகுதியில் பலத்த மழை காரணமாக குறைந்து விழுந்த அருவி நீர் வெள்ளமாக மாறி கொட்டத் தொடங்கியது. இதன் காரணமாக நேற்று இரவு முதல் மெயினருவியிலும், ஐந்தருவியிலும் சுற்றுலா பயணிகளை குளிக்க போலீசார் தடை விதித்தனர்.

தொடர்ந்து மழை நேற்று இரவில் குறைந்த நிலையில் இன்று காலை மெயினருவியில் வெள்ளம் குறைந்த து. இதனைத் தொடர்ந்து காலை முதல் ஐந்தருவி, மெயினருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது. அனைத்து அருவிகளிலும் நீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து வருகிறது.

ALSO READ:  விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..

கோடை விடுமுறை நாட்கள் என்பதால் இன்று காலை முதல் கூட்டம் மேலும் அதிகரித்து அருவிகளில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ச்சியோடு சென்ற வண்ணம் உள்ளனர். தொடர் மழை காரணமாக வியாபாரிகள், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories