பண்ருட்டி வேல்முருகன் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றம்!

Published:

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பன்ருட்டி வேல்முருகன், சிறுநீரக பாதிப்பு ஏற்பட்ட நிலையில், அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தூத்துக்குடிக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட முயன்றார் பன்ருட்டி வேல்முருகன். அப்போது, தூத்துக்குடி போலீஸார் அவரைக் கைது செய்து, உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி உடைப்பு சம்பவத்தில் வழக்கு பதியப் பட்டிருந்த நிலையில், உளுந்தூர்பேட்டை போலீஸாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் நீதிபதி முன் ஆஜர்படுத்தப் பட்டு,  புழல் சிறையில் அடைக்கப் பட்டார். அங்கு திடீரென தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார்.

மதிமுக., பொதுச்செயலாளர் வைகோ கேட்டுக் கொண்டைதை அடுத்து உண்ணாவிரதத்தை கைவிட்ட வேல்முருகன் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் ஸ்டான்லி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img