முடிவுக்கு வந்த அழுகுணி ஆட்டம்: பேரவையில் பங்கேற்க திமுக., முடிவு!

dmk meeting - 2026

சென்னை: சட்டப்பேரவை நிகழ்ச்சிகளில் நாளை முதல் மீண்டும் பங்கேற்கப் போவதாக திமுக., அறிவித்துள்ளது. இதன் மூலம் அதன் தற்காலிக அழுகுணி ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

தமிழக சட்டப் பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் கடந்த மே 29ஆம் தேதி துவங்கியது. அன்று சட்டசபைக்கு வந்த எதிர்க் கட்சித் தலைவர் ஸ்டாலின், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை அரசு நிரந்தரமாக மூட உரிய நடவடிக்கை எடுக்கும் வரை சட்டசபையைப் புறக்கணிப்பதாகக் கூறினார். தொடர்ந்து திமுக., எம்எல்ஏ.,க்கள் அவையை விட்டு வெளிநடப்பு செய்தனர்.

அதன் பின்னர் சென்னை அறிவாலயத்தில் போட்டி சட்டமன்றக் கூட்டத்தை நடத்தினார் ஸ்டாலின். திமுக., – எம்எல்ஏ.,க்கள் மட்டுமல்லாது, கூட்டணிக் கட்சியான காங்கிரஸ், முஸ்லிம் லீக் கட்சிகளின் எம்எல்ஏ.,க்களும், ஜெயலலிதாவின் கருணையால் சட்டமன்ற உறுப்பினரான நடிகர் கருணாஸும் பங்கேற்றனர். இதே போல் மாதிரி சட்டமன்றக் கூட்டத்தை மற்ற நகரங்களிலும் நடத்தப் போவதாக திமுக., அறிவித்தது. இருப்பினும் மாதிரி சட்டமன்றக் கூட்டத்தில் ஒரு மாதிரியாகப் பங்கேற்ற காங்கிரஸ், முஸ்லிம் லீக் எம்எல்ஏ.,க்கள் மறு நாளே சட்டமன்றக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் சட்டமன்றத்தில் எதிர்ப்பு எதுவும் இல்லாமல் சுலபமாக மானியக் கோரிக்கைகளை அதிமுக., அரசு நிறைவேற்றி வருகிறது.

இந்நிலையில் திருவாரூரில் இரு தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற கருணாநிதி பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற கூட்டணிக் கட்சி தலைவர்கள், சட்டசபை விவாதங்களில் திமுக., பங்கேற்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதை அடுத்து அறிவாலயத்தில் ஸ்டாலின் தலைமையில் நேற்று நடந்த எம்எல்ஏ.,க்கள் கூட்டத்தில், நாளை முதல் மீண்டும் சட்டசபைக்கு செல்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ALSO READ:  பிரசாரத்தில் இருந்த திமுக., வேட்பாளர்; வீட்டில் 122 பவுன் நகை கொள்ளை!

முன்னதாக, எடப்பாடி பழனிசாமி முதல்வர் பதவியில் இருந்து விலகும் வரை சட்ட மன்றக் கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டேன் என்று அறிவித்தார் ஸ்டாலின். தானும் சட்டமன்றம் போகாமல், கூட்டணியினரையும் போகவிடாமல் தடுக்கலாம் என்று நினைத்த நிலையில், மறு நாளே கூட்டணிக் கட்சியினர் வழக்கம் போல் சட்டமன்றத்துக்குச் சென்றனர். மூவர் அணியில் தனியரசு சட்டமன்ற நிகழ்ச்சியிலும், கருணாஸ் திமுக.,வின் போட்டி சட்டமன்ற நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டனர். தமிமுன் அன்சாரி இரண்டிலும் கலந்து கொள்ளாமல் புறக்கணித்து மூவர் அணியின் முரண்பாட்டை வெளிக்காட்டினார்.

தம் எண்ணம் நிறைவேறாத நிலையில், வேறு வழியின்றி சட்டமன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதாக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  இதன் படி, திமுக.,வின் தற்காலிக போட்டி சட்டசபைக் கூட்டம், சட்டசபைப் புறக்கணிப்பு உள்ளிட்ட அழுகுணி ஆட்டங்கள் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories