தன் குடும்ப பொருளாதாரத்தின் 3 டயர்கள் பஞ்சர் ஆனதைத்தான் ப.சி., அப்படி சொன்னாரோ? ஹெச்.ராஜா நக்கல்!

h raja - 2026
இந்திய பொருளாதாரத்தின் நிலை 3 டயர்களும் பஞ்சரான கார் போல உள்ளது என்று ப. சிதம்பரம் கிண்டல் செய்திருந்ததற்கு நக்கல் அடித்துள்ளார் ஹெச். ராஜா. அதன்படி, தன் குடும்ப பொருளாதாரத்தின் 3 டயர்களும் பஞ்சர் ஆனதைத்தான் அப்படிச் சொல்கிறார் போலும் என்று கூறியுள்ளார் பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா.

அவர் இது குறித்து வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், திரு. ப.சி அவர்கள் பொருளாதாரத்தின் 3 வீல் பஞ்சர் ஆகிவிட்டது என்று கூறியுள்ளது தன் குடும்ப பொருளாதாரம் பற்றியதோ? ஏனெனில் ப.சி, கார்த்திக் சிதம்பரம், நளினி சிதம்பரம் மூவரும் பொருளாதார குற்ற விசாரணையில் உள்ளதால் 3, வீல் பஞ்சர் என்று உணர்கிறார் போலும்!” என்று கூறியுள்ளார்.

 

முன்னதாக, இந்தியப் பொருளாதாரத்தின் நிலை, 3 டயர்களும் பஞ்சரான கார் போல இருப்பதாக முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப. சிதம்பரம் விமர்சித்திருந்தார். மகாராஷ்டிர மாநிலம், தாணேயில் அந்த மாநில காங்கிரஸ் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, இதுகுறித்து அவர் பேசியபோது, தனியார் துறையின் முதலீடு, தனியார் துறையின் நுகர்வு, ஏற்றுமதிகள், அரசு செலவீனங்கள் ஆகியவையே, பொருளாதார வளர்ச்சியின் 4 இயந்திரங்கள் ஆகும். அவை ஒரு காரிலுள்ள 4 டயர்கள் போன்றவை. காரில் உள்ள ஒன்று அல்லது இரண்டு டயர்கள் பஞ்சரானால், காரின் வேகம் குறையும். ஆனால், நமது நாட்டின் பொருளாதார நிலையோ 3 டயர்களும் பஞ்சரான காரின் நிலை போல் உள்ளது.

03 June05 p chidambaram - 2026

சுகாதாரத் துறையிலும் மேலும் சில கட்டமைப்பிலும்தான் அரசு நிதியை செலவு செய்கிறது. அதே நேரத்தில் பெட்ரோல், டீசல், எல்பிஜி போன்றவை மீது மத்திய அரசு தொடர்ந்து வரி விதித்தபடியே இருக்கிறது. இத்தகைய வரிகள் வாயிலாக மக்களிடம் இருந்து பணத்தை மத்திய அரசு பறிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளது.

மின்சாரத் துறையில் அண்மைக் காலத்தில் ஏதேனும் முதலீடு செய்யப்பட்டதா? உதாரணமாக, திவாலான 10 முக்கிய நிறுவனங்களில் 5 நிறுவனங்கள் உருக்கு நிறுவனங்கள் ஆகும். அப்படியிருக்கையில், அந்தத் துறையில் எப்படி முதலீடு நடைபெறும்?

முத்ரா திட்டத்தின்கீழ் நபர் ஒருவருக்கு ரூ.43 ஆயிரம் மட்டும்தான் கடன் உதவி அளிக்கப்படுகிறது. இவ்வளவு குறைவான தொகையைக் கொண்டு எந்தத் தொழிலும் முதலீடு செய்ய முடியாது. பக்கோடா தொழிலில் மட்டுமே முதலீடு செய்ய முடியும் என்று பேசியிருந்தார் ப.சிதம்பரம்.

இந்நிலையில் குடும்பத்தின் முக்கிய மூன்று உறுப்பினர்களான ப.சிதம்பரம், அவர் மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம் மூவரும் பொருளாதார குற்ற விசாரணையில் முடங்கியிருப்பதால், சிதம்பரம் தன் குடும்பத்தை நினைத்து நாட்டுக்கு அதை ஏற்றிச் சொல்லியிருக்கிறார் என்று நக்கல் அடித்துள்ளார் ஹெச்.ராஜா.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories