December 5, 2025, 10:36 PM
26.6 C
Chennai

தன் குடும்ப பொருளாதாரத்தின் 3 டயர்கள் பஞ்சர் ஆனதைத்தான் ப.சி., அப்படி சொன்னாரோ? ஹெச்.ராஜா நக்கல்!

h raja - 2025
இந்திய பொருளாதாரத்தின் நிலை 3 டயர்களும் பஞ்சரான கார் போல உள்ளது என்று ப. சிதம்பரம் கிண்டல் செய்திருந்ததற்கு நக்கல் அடித்துள்ளார் ஹெச். ராஜா. அதன்படி, தன் குடும்ப பொருளாதாரத்தின் 3 டயர்களும் பஞ்சர் ஆனதைத்தான் அப்படிச் சொல்கிறார் போலும் என்று கூறியுள்ளார் பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா.

அவர் இது குறித்து வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், திரு. ப.சி அவர்கள் பொருளாதாரத்தின் 3 வீல் பஞ்சர் ஆகிவிட்டது என்று கூறியுள்ளது தன் குடும்ப பொருளாதாரம் பற்றியதோ? ஏனெனில் ப.சி, கார்த்திக் சிதம்பரம், நளினி சிதம்பரம் மூவரும் பொருளாதார குற்ற விசாரணையில் உள்ளதால் 3, வீல் பஞ்சர் என்று உணர்கிறார் போலும்!” என்று கூறியுள்ளார்.

 

முன்னதாக, இந்தியப் பொருளாதாரத்தின் நிலை, 3 டயர்களும் பஞ்சரான கார் போல இருப்பதாக முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப. சிதம்பரம் விமர்சித்திருந்தார். மகாராஷ்டிர மாநிலம், தாணேயில் அந்த மாநில காங்கிரஸ் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, இதுகுறித்து அவர் பேசியபோது, தனியார் துறையின் முதலீடு, தனியார் துறையின் நுகர்வு, ஏற்றுமதிகள், அரசு செலவீனங்கள் ஆகியவையே, பொருளாதார வளர்ச்சியின் 4 இயந்திரங்கள் ஆகும். அவை ஒரு காரிலுள்ள 4 டயர்கள் போன்றவை. காரில் உள்ள ஒன்று அல்லது இரண்டு டயர்கள் பஞ்சரானால், காரின் வேகம் குறையும். ஆனால், நமது நாட்டின் பொருளாதார நிலையோ 3 டயர்களும் பஞ்சரான காரின் நிலை போல் உள்ளது.

03 June05 p chidambaram - 2025

சுகாதாரத் துறையிலும் மேலும் சில கட்டமைப்பிலும்தான் அரசு நிதியை செலவு செய்கிறது. அதே நேரத்தில் பெட்ரோல், டீசல், எல்பிஜி போன்றவை மீது மத்திய அரசு தொடர்ந்து வரி விதித்தபடியே இருக்கிறது. இத்தகைய வரிகள் வாயிலாக மக்களிடம் இருந்து பணத்தை மத்திய அரசு பறிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளது.

மின்சாரத் துறையில் அண்மைக் காலத்தில் ஏதேனும் முதலீடு செய்யப்பட்டதா? உதாரணமாக, திவாலான 10 முக்கிய நிறுவனங்களில் 5 நிறுவனங்கள் உருக்கு நிறுவனங்கள் ஆகும். அப்படியிருக்கையில், அந்தத் துறையில் எப்படி முதலீடு நடைபெறும்?

முத்ரா திட்டத்தின்கீழ் நபர் ஒருவருக்கு ரூ.43 ஆயிரம் மட்டும்தான் கடன் உதவி அளிக்கப்படுகிறது. இவ்வளவு குறைவான தொகையைக் கொண்டு எந்தத் தொழிலும் முதலீடு செய்ய முடியாது. பக்கோடா தொழிலில் மட்டுமே முதலீடு செய்ய முடியும் என்று பேசியிருந்தார் ப.சிதம்பரம்.

இந்நிலையில் குடும்பத்தின் முக்கிய மூன்று உறுப்பினர்களான ப.சிதம்பரம், அவர் மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம் மூவரும் பொருளாதார குற்ற விசாரணையில் முடங்கியிருப்பதால், சிதம்பரம் தன் குடும்பத்தை நினைத்து நாட்டுக்கு அதை ஏற்றிச் சொல்லியிருக்கிறார் என்று நக்கல் அடித்துள்ளார் ஹெச்.ராஜா.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories