தாம்பரத்தில் மூன்றாவது ரயில் முனையம்! அந்த்யோதயா ரயிலை தொடங்கி வைத்த அமைச்சர்!

andhyodayatrain - 2026

சென்னை: சென்னை தாம்பரத்தில் மூன்றாவது ரயில் முனையம் முறைப்படி இன்று தொடங்கி வைக்கப் பட்டது. சென்னையில் செண்ட்ரல், எழும்பூர் என இரண்டு ரயில் முனையங்கள் ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ளன. இந்நிலையில், மூன்றாவது ரயில் முனையமாக, தாம்பரம் ரயில் நிலையத்தை அமைச்சர் ராஜன் கோகைன் தொடக்கி வைத்தார். மேலும்,  தாம்பரம் – திருநெல்வேலி இடையிலான அந்தியோதயா விரைவு ரயிலையும் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

தாம்பரம் – திருநெல்வேலி இடையே முன்பதிவு செய்யப்படாத 16 பெட்டிகளைக் கொண்ட அந்த்யோதயா ரயில் தினசரி இயக்கப்படுகிறது. தாம்பரத்தில் நடைபெற்ற விழாவில் மத்திய அமைச்சர்கள் ராஜன் கோகைன், பொன் ராதாகிருஷ்ணன், தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு, இந்த ரயிலை கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர்.

திருநெல்வேலி – தாம்பரம் அந்தியோதயா விரைவு ரயிலில் எல்எச்பி பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதால் மற்ற ரயில்களைவிட விரைவாகவும் பாதுகாப்பாகவும் செல்ல முடியும். இருக்கைகளின் மேற்புறத்தில் பைகளைத் தொங்க விடுவதற்காகக் கூடுதல் கொக்கிகள் பொருத்தப்பட்டுள்ளன. வடிகட்டியுடன் கூடிய குடிநீர்க் குழாய்கள் பெட்டிகளின் இரு புறமும் வாயில் ஓரத்தில் உள்ளன.

நின்று கொண்டு பயணிப்போருக்கு வசதியாக மேலே கைப்பிடிகள் உள்ளன. புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய பயோ டாய்லெட்கள் உள்ளன. குப்பைகளைப் போட பெரிய கூடைகளும் உள்ளன. பெட்டிகளில் உள்ள எல்இடி விளக்குகள் மின்சாரம் துண்டித்தாலும் ஒளிரும். செல்போன் லேப்டாப் சார்ஜர்கள் வசதியும் உள்ளது.

andhyodayatrain2.jpg - 2026

கோவை- பெங்களூர் இடையே வாரம் 6 நாட்கள் இயங்கும் உதய் ரயில்!

கோவை – பெங்களூர் இடையே வாரம் 6 நாட்கள் இயங்கும் வைஃபை வசதியுடன் கூடிற உதய் விரைவு ரயிலையும் அமைச்சர் ராஜன் கோகைன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். மேலும், ரயில் நிலைய இரண்டாவது மூன்றாவது நடைமேடைகளில் லிப்ட் வசதியையும் அமைச்சர் தொடங்கி வைத்தார்.

உதய் ரயில், திங்கட்கிழமை தவிர மற்ற நாட்களில் இயங்கும். இரண்டு அடுக்கு உதய் ரயில் கோவையில் இருந்து காலை ஐந்தே முக்கால் மணிக்கு புறப்பட்டு பகல் 12.40க்குப் பெங்களூர் சென்று சேரும். பெங்களூரில் பிற்பகல் இரண்டேகால் மணிக்குப் புறப்பட்டு இரவு ஒன்பது மணிக்குக் கோவை வந்து சேரும். திருப்பூர், ஈரோடு, சேலம், குப்பம், கிருஷ்ணராஜபுரம் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories