தாம்பரத்தில் மூன்றாவது ரயில் முனையம்! அந்த்யோதயா ரயிலை தொடங்கி வைத்த அமைச்சர்!

andhyodayatrain - 2026

சென்னை: சென்னை தாம்பரத்தில் மூன்றாவது ரயில் முனையம் முறைப்படி இன்று தொடங்கி வைக்கப் பட்டது. சென்னையில் செண்ட்ரல், எழும்பூர் என இரண்டு ரயில் முனையங்கள் ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ளன. இந்நிலையில், மூன்றாவது ரயில் முனையமாக, தாம்பரம் ரயில் நிலையத்தை அமைச்சர் ராஜன் கோகைன் தொடக்கி வைத்தார். மேலும்,  தாம்பரம் – திருநெல்வேலி இடையிலான அந்தியோதயா விரைவு ரயிலையும் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

தாம்பரம் – திருநெல்வேலி இடையே முன்பதிவு செய்யப்படாத 16 பெட்டிகளைக் கொண்ட அந்த்யோதயா ரயில் தினசரி இயக்கப்படுகிறது. தாம்பரத்தில் நடைபெற்ற விழாவில் மத்திய அமைச்சர்கள் ராஜன் கோகைன், பொன் ராதாகிருஷ்ணன், தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு, இந்த ரயிலை கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர்.

திருநெல்வேலி – தாம்பரம் அந்தியோதயா விரைவு ரயிலில் எல்எச்பி பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதால் மற்ற ரயில்களைவிட விரைவாகவும் பாதுகாப்பாகவும் செல்ல முடியும். இருக்கைகளின் மேற்புறத்தில் பைகளைத் தொங்க விடுவதற்காகக் கூடுதல் கொக்கிகள் பொருத்தப்பட்டுள்ளன. வடிகட்டியுடன் கூடிய குடிநீர்க் குழாய்கள் பெட்டிகளின் இரு புறமும் வாயில் ஓரத்தில் உள்ளன.

நின்று கொண்டு பயணிப்போருக்கு வசதியாக மேலே கைப்பிடிகள் உள்ளன. புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய பயோ டாய்லெட்கள் உள்ளன. குப்பைகளைப் போட பெரிய கூடைகளும் உள்ளன. பெட்டிகளில் உள்ள எல்இடி விளக்குகள் மின்சாரம் துண்டித்தாலும் ஒளிரும். செல்போன் லேப்டாப் சார்ஜர்கள் வசதியும் உள்ளது.

andhyodayatrain2.jpg - 2026

கோவை- பெங்களூர் இடையே வாரம் 6 நாட்கள் இயங்கும் உதய் ரயில்!

கோவை – பெங்களூர் இடையே வாரம் 6 நாட்கள் இயங்கும் வைஃபை வசதியுடன் கூடிற உதய் விரைவு ரயிலையும் அமைச்சர் ராஜன் கோகைன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். மேலும், ரயில் நிலைய இரண்டாவது மூன்றாவது நடைமேடைகளில் லிப்ட் வசதியையும் அமைச்சர் தொடங்கி வைத்தார்.

உதய் ரயில், திங்கட்கிழமை தவிர மற்ற நாட்களில் இயங்கும். இரண்டு அடுக்கு உதய் ரயில் கோவையில் இருந்து காலை ஐந்தே முக்கால் மணிக்கு புறப்பட்டு பகல் 12.40க்குப் பெங்களூர் சென்று சேரும். பெங்களூரில் பிற்பகல் இரண்டேகால் மணிக்குப் புறப்பட்டு இரவு ஒன்பது மணிக்குக் கோவை வந்து சேரும். திருப்பூர், ஈரோடு, சேலம், குப்பம், கிருஷ்ணராஜபுரம் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories