சஹஸ்ரநாம பாராயணம் செய்ய கடைபிடிக்க வேண்டிய நியமங்கள் என்ன?

Published:

samavedam pic - 2026

கேள்வி:- நான் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் லலிதா சகஸ்ரநாமமும், விஷ்ணு சஹஸ்ர நாமமும் பாராயணம் செய்து வருகிறேன். இவற்றைப் பாராயணம் செய்யும் போதும், பாராயணம் செய்யும் நாட்களிலும் கடைபிடிக்க வேண்டிய நியமங்கள் என்ன?

பதில்:- அவரவர் சக்திக்குத் தகுந்தபடி நியமங்களைக் கடைபிடிக்கலாம். அந்த நாட்களில் தாமச குணத்தை ஏற்படுத்தும் உணவு வகைகளான வெங்காயம், பூண்டு போன்றவற்றை நீக்க வேண்டும். சாப்பிட்ட உடனே பாராயணம் செய்யாதிருப்பது நல்லது. பாராயணம் பூர்த்தி ஆன பின் தூபம், தீபம் சமர்ப்பித்து பாலோ அல்லது பழமோ நைவேத்யம் செய்து, முடிந்தால் ஒரு தேங்காய் உடைத்து ஆரத்தி எடுத்து இறைவனுக்கு அர்ப்பணம் செய்ய வேண்டும். முக்கியமான இந்த நியமங்களைக் கடைப்பிடித்தாலே போதும்.

ஆன்மீக மற்றும் தார்மீக சந்தேகங்கள் சிலவற்றுக்கு பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்கள் மிகச் சிறப்பாக, சாஸ்திர ஆதாரத்தோடு அளித்துள்ள பதில்கள்:-

தெலுங்கில் இருந்து தமிழாக்கம்- ராஜி ரகுநாதன்
(ஆதாரம்:- சமாதானம் பாகம் -2 என்ற நூலிலிருந்து..)

ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img