சபாநாயகர் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது; 2 வழக்கிலும் தலைமை நீதிபதி உறுதி..!

indira banarjee - 2026

சென்னை: தமிழக சட்டமன்றத்தில் சபாநாயகர் எடுத்த முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என அண்மைக்காலத்திய இரு வழக்குகளிலும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி உறுதியுடன் இருந்துள்ளார். இன்றும் தனது உறுதியை 18 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்க வழக்கிலும் வெளிப்படுத்தியுள்ளார்.

தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரியும், அதிமுக., எம்எல்ஏ.,க்கள் 18 பேர் அப்போதைய பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் புகார் அளித்தனர். இதனால், அவர்கள் 18 பேரும் கொறடா உத்தரவை மீறியதாகக் கூறி, அவர்களை தகுதி நீக்கம் செய்து உத்த்ரவிட்டார் அவைத்தலைவர் தனபால்.

18mlas1 - 2026

இந்நிலையில் அவைத்தலைவரின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து 18 பேரும் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதே நேரம், திமுக கொறடா சக்கரபாணியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், கொறடா உத்தரவை மீறியதாக 18 எம்எல்ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்ய உத்தரவிட்டது போல் கடந்த ஆண்டு பிப்ரவரி 18 ஆம் தேதி எடப்பாடி அரசு கொண்டு வந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, கொறடா உத்தரவுக்கு மாறாக வாக்களிக்காமல் விட்ட ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏ.,க்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.

18mlas - 2026இந்த வழக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வில் வந்த போது, ஏப்ரல் 27 அன்று அவர் அளித்த தீர்ப்பில், சபாநாயகரின் முடிவே இறுதியானது. அதில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக் கூறினார். இதனால், ஓபிஎஸ்., ஆதரவு 11 எம்எல்ஏக்கள் விவகாரத்தில், அவர்களை தகுதி நீக்கம் செய்யக் கோரிய மனு தள்ளுபடி ஆனது. மேலும் சபாநாயகர் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்ற கருத்தும் வெளிப்பட்டது.

எனவே, இன்று தீர்ப்பு வெளியான 18 எம்எல்ஏ.,க்கள் தகுதி நீக்க வழக்கிலும், தலைமை நீதிபதி இவ்வாறுதான் கூறுவார் என்று முன்னரே எதிர்பார்க்கப் பட்டது.

அது போல், தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி சபாநாயகர் உத்தரவில் தலையிட முடியாது என்று உறுதிபடக் கூறியுள்ளார். ஆனால் மற்றொரு நீதிபதி சுந்தரோ 18 பேரின் தகுதி நீக்கம் செல்லாது என்றார்.

இப்படி இருவரும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால், மூன்றாவது நீதிபதியின் தீர்ப்பை எதிர்நோக்கி, இந்த வழக்கு ஒத்திவைக்கப் பட்டுள்ளது. ஒரே கட்சி, ஒரே விதமான வழக்குகள், ஒரே விதமான அணுகுமுறை, ஒரே விதமான தீர்ப்புகள் என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியின் செயல்பாடு உறுதித் தன்மையுடன் பார்க்கப் படுகிறது.

1 COMMENT

  1. அரசியல் விளையாட்டு நீதியும் நீதிபதிகளும் சுதந்திரமாக செயல்படவில்லை குழப்பமே என்பது முதல்வி வழக்கு நீதி தீர்ப்பு தாமதமும் இந்த ௧௮ எம்.எல்.ஏ மாறுபட்ட தீர்ப்புகளும் மான்வேட்டை ,குடித்து காரோட்டியது,வெடிகுண்டு வைத்த சதியாலர்களுக்கு துணை போன வழக்கு அனைத்தும் நீதி மெல்ல மெல்ல சாகும் பண அதிகாரபலம் தான் வெல்லும் சட்டம் இருட்டறை என்பது உறுதியாகிக்கொண்டிருக்கிறது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories