January 25, 2025, 9:11 PM
25.3 C
Chennai

சாலையோர ஓட்டலில் புகுந்த அரசு பஸ்: டீ குடித்துக் கொண்டிருந்த 5 பேர் பரிதாப பலி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே சாலையோர ஹோட்டலில் டீ குடித்துக் கொண்டிருந்த மற்றும் பஸ்ஸுக்குக் காத்திருந்த 5 பேர் தறிகெட்டு வந்த பஸ் மோதி பரிதாபமாக பலியாகினர். மதுரையில் இருந்து 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பஸ் நேற்று இரவு 10 மணி அளவில் திருவண்ணாமலை நோக்கி வந்தது அந்த பஸ், திருக்கோவிலூர் கடந்து திருவண்ணாமலை நோக்கி தென்மாத்தூர் அருகே வந்தபோது, இன்று அதிகாலை பஸ் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி தென்மாத்தூர் கூட்ரோடில் உள்ள முருகன் கோவில் அருகில் சாலையோரம் இருந்த ஓட்டலுக்குள் புகுந்தது. அப்போது, ஓட்டலில் அமர்ந்து டீ குடித்துக் கொண்டிருந்தவர்கள் மீதும், பஸ்சுக்காக காத்திருந்தவர்கள் மீதும் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் தென்மாத்தூர் காமராஜ் நகரைச் சேர்ந்த சீமான் (70), ஏழுமலை (40), அருணாசலம் (55), ரங்கன், தென்மாத்தூர் ராமலிங்கம்(58) ஆகிய 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் அதே பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி(53), முனுசாமி(48), தாணல்(80) ஆகிய 3 பேரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் முனுசாமி, தாணல் இருவரும் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்துக்குக் காரணமான ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். 5 பேர் பலியான சம்பவத்தை அறிந்த அப்பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்தில் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு வந்த போலீசார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரசப் பேச்சு நடத்தினர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். பலியான 5 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த வெறையூர் போலீசார், இது குறித்து வழக்கு பதிவு செய்து விபத்துக்கு காரணமான டிரைவரை தேடி வருகின்றனர். விபத்து குறித்து தகவலறிந்த அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன், ஆட்சியர் ஞானசேகரன், போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி ஆகியோர் திருவண்ணாமலை மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினர். செய்தியாளர்: வி.பாலாஜி, திருவண்ணாமலை

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

டங்ஸ்டன் அரசியல்; ஸ்டாலின் கருத்துக்கு ராம சீனிவாசன் பதிலடி!

டங்ஸ்டன் திட்டத்தை அரசியலாக்க விரும்பவில்லை அனைத்துக் கட்சியினருமே போராடி இருக்கின்றனர் என்று

பஞ்சாங்கம் ஜன.25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் செய்ததில்… யாருக்கு வெற்றி?!

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் தடுத்ததில் யாருக்கு முழு வெற்றி போகவேண்டும் என்று பெரும் கூத்து நடந்துகொண்டிருக்கிறது.

திருப்பரங்குன்றத்தில் பாஜக., எம்.எல்.ஏ., இந்து முன்னணி தலைவர் ஆய்வு!

இந்துமுன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பாஜக சட்டமன்ற குழு தலைவர் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார்நாகேந்திரன் ஆகியோருடன்

தினசரி பெரியவா தியானம்: நூல் பெற..!

ரா. கணபதி அண்ணா, மகா பெரியவாளின் கருத்துகளைத் தொகுத்து அவற்றை தெய்வத்தின் குரல் என்று ஏழு பகுதிகள் அடங்கிய நூல் தொகுப்பாக வெளியிட்டுள்ளதை அனைவரும் அறிவோம்.