தமிழக திட்டங்களுக்கு உதவக் கோரி மத்திய அமைச்சர்களை சந்தித்தார் விஜயகாந்த்

Vijayakanth-Meeting-With-PM புது தில்லி: தமிழக நலத் திட்டங்களுக்கு உதவக் கோரி, தில்லியில் மத்திய அமைச்சர்களை சந்தித்துப் பேசினார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். மேகதாது அணைப் பிரச்னை, முல்லைப் பெரியாறு, ஆந்திர என்கவுண்டர் என தமிழகத்தின் ஐந்து முக்கியப் பிரச்னைகளை முன்வைத்து பிரதமர் நரேந்திர மோடியை எதிர்கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் சந்தித்தார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். இதற்காக அவர் தலைமையில் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் அடங்கிய குழு திங்கள்கிழமை தில்லி சென்றது. பின்னர் நரேந்திர மோடியை சந்தித்த கையோடு, விஜயகாந்த் மத்திய தரைவழி மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்தார். அப்போது அவரிடம், தமிழகத்தில் நிலுவையில் உள்ள தேசிய சாலைத் திட்டங்கள், தேமுதிக எம்.எல்.ஏ.க்களின் தொகுதியில் நடைபெறும் மேம்பாலங்கள் மற்றும் திட்டங்களை விரைந்து முடிக்க உதவ வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். தொடர்ந்து, நாடாளுமன்ற விவாகரத் துறை அமைச்சர் வெங்கையா நாயுடுவை சந்தித்து, அவரிடம் தமிழகத்தில் நிலுவையில் உள்ள நலத்திட்டங்கள் மற்றும் மெட்ரோ ரயில் திட்டம் ஆகியவற்றை காலதாமதம் இன்றி நிறைவேற்ற வலியுறுத்தினார். பின்னர், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து, ஆந்திராவில் 20 தமிழகர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட கோரிக்கை விடுத்தார். பின்னர், நிதியமைச்சர் அருண் ஜேட்லியை அவரது அலுவலகத்தில் சந்தித்து, தமிழக அரசின் ரூ.2 லட்சம் கோடி கடன் சுமைக்குத் தீர்வு காணவும், நிதிப் பற்றாக்குறை காரணமாக தமிழகத்தில் நிலுவையில் உள்ள நலத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை வழங்கவும் வலியுறுத்தினார். தில்லியைச் சுற்றி வரும் விஜயகாந்த், தமிழக அரசு செயலற்ற நிலையில் உள்ளது என்பதைக் காட்டவும், அடுத்து வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் துடிப்பாகக் களம் இறங்கவும் திடீரென இவ்வாறு களம் இறங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் கோரிக்கைகளை முன்வைத்து தில்லியை சுற்றினாலும், கூட்டணி சார்பில் தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்பதை பாஜக தலைமையிடம் முன்வைக்கவும் இந்த பயணத்தை அவர் பயன்படுத்திக் கொண்டதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேச்சு எழுந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

Topics

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 11 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories