December 5, 2025, 1:45 PM
26.9 C
Chennai

முன்னாள் எம்.எல்.ஏ.,வை தாக்கிய காவல் அதிகாரி: கண்டித்து ஜூன் 30ல் மாவட்ட தலைநகரங்களில் கம்யூனிஸ்ட் ஆர்ப்பட்டம்!

communist mla delhibabu - 2025

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  பி.டில்லிபாபு மீது தாக்குதல் நடத்திய செங்கம் டி.எஸ்.பி. சுந்தரமூர்த்தியை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று அக் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்தி உள்ளது.

இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை:

சென்னை – சேலம் 8 வழிச் சாலை தங்கள் வாழ்வாதாரத்தை பாதிப்பதால் இந்த சாலை செல்லும் மாவட்ட மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த 26ந் தேதி இந்த பகுதி மக்கள் வீடுகளிலும், வயல்களிலும் கருப்புக்கொடி ஏற்றி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தார்கள்.

இந்தப்  போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காகச் சென்ற முன்னாள் எம்.எல்.ஏ., பி. டில்லிபாபு உணவகத்தில் உணவு அருந்திக் கொண்டிருந்த போது பொதுமக்கள் முன்னிலையில், மூர்க்கத்தனமாகவும், அநாகரீகமாகவும், அடித்து இழுத்துச் சென்ற காணொளிக் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

டில்லிபாபுவை இழிவுபடுத்தி, மூர்க்கத்தனமாக செங்கம் டி.எஸ்.பி. சுந்தரமூர்த்தி தாக்கியுள்ளார். அவரிடமிருந்த அலைபேசியைப் பறித்து சுவிட்ச் ஆப் செய்துள்ளார். இத்தகைய நடவடிக்கையை தட்டிக்கேட்ட தோழர்களையும் கடுமையாகத் தாக்கியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு செங்கம் டி.எஸ்.பி. சுந்தரமூர்த்தியின் இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறது. தமிழக அரசும், காவல்துறையும் உடனடியாக டி.எஸ்.பி. சுந்தரமூர்த்தியை பணியிடை நீக்கம் செய்து, கிரிமினல் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டுமென்றும், சட்டத்தின்படி உரிய தண்டனை கொடுக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

இந்த நடவடிக்கைகள் அனைத்தும் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் வழிகாட்டுதலிலேயே நடந்திருக்கிறது. அவரை உடனடியாக இடமாற்றம் செய்ய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

தாக்குதல் நடத்திய செங்கம் டி.எஸ்.பி., மற்றும் திருவண்ணாமலை மாவட்ட கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் ஜூன் 30, 2018 அன்று மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டுமென கட்சி அணிகளை மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

– என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories