முன்னாள் எம்.எல்.ஏ.,வை தாக்கிய காவல் அதிகாரி: கண்டித்து ஜூன் 30ல் மாவட்ட தலைநகரங்களில் கம்யூனிஸ்ட் ஆர்ப்பட்டம்!

Published:

communist mla delhibabu - 2026

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  பி.டில்லிபாபு மீது தாக்குதல் நடத்திய செங்கம் டி.எஸ்.பி. சுந்தரமூர்த்தியை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று அக் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்தி உள்ளது.

இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை:

சென்னை – சேலம் 8 வழிச் சாலை தங்கள் வாழ்வாதாரத்தை பாதிப்பதால் இந்த சாலை செல்லும் மாவட்ட மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த 26ந் தேதி இந்த பகுதி மக்கள் வீடுகளிலும், வயல்களிலும் கருப்புக்கொடி ஏற்றி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தார்கள்.

இந்தப்  போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காகச் சென்ற முன்னாள் எம்.எல்.ஏ., பி. டில்லிபாபு உணவகத்தில் உணவு அருந்திக் கொண்டிருந்த போது பொதுமக்கள் முன்னிலையில், மூர்க்கத்தனமாகவும், அநாகரீகமாகவும், அடித்து இழுத்துச் சென்ற காணொளிக் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

டில்லிபாபுவை இழிவுபடுத்தி, மூர்க்கத்தனமாக செங்கம் டி.எஸ்.பி. சுந்தரமூர்த்தி தாக்கியுள்ளார். அவரிடமிருந்த அலைபேசியைப் பறித்து சுவிட்ச் ஆப் செய்துள்ளார். இத்தகைய நடவடிக்கையை தட்டிக்கேட்ட தோழர்களையும் கடுமையாகத் தாக்கியுள்ளார்.

ALSO READ:  FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு செங்கம் டி.எஸ்.பி. சுந்தரமூர்த்தியின் இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறது. தமிழக அரசும், காவல்துறையும் உடனடியாக டி.எஸ்.பி. சுந்தரமூர்த்தியை பணியிடை நீக்கம் செய்து, கிரிமினல் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டுமென்றும், சட்டத்தின்படி உரிய தண்டனை கொடுக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

இந்த நடவடிக்கைகள் அனைத்தும் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் வழிகாட்டுதலிலேயே நடந்திருக்கிறது. அவரை உடனடியாக இடமாற்றம் செய்ய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

தாக்குதல் நடத்திய செங்கம் டி.எஸ்.பி., மற்றும் திருவண்ணாமலை மாவட்ட கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் ஜூன் 30, 2018 அன்று மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டுமென கட்சி அணிகளை மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

– என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img