தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலக்கும் தனியார் ஆலையில் மின் இணைப்பு துண்டிப்பு!

madura coats - 2026

நெல்லை : தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலப்பதாக எழுந்த புகாரை அடுத்து அம்பாசமுத்திரம் அருகே இயங்கி வரும் மதுரா கோட்ஸ் ஆலையின் மின் இணைப்பை துண்டித்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ளது135 ஆண்டுகள் பழமையான மதுரா கோட்ஸ் ஆலை. இங்கே உள்ள சாயப்பட்டறை கழிவுகள் தாமிரபரணி ஆற்றில் கலப்பதால் தண்ணீர் மாசு பட்டுள்ளதாக தமிழ்நாடு மாசுக் கட்டுட்டுப்பாட்டு வாரியம் நேற்று இரவு முதல் ஆலையை இயக்க தடை விதித்தது. மேலும் ஆலையில் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டு ஜெனரேட்டர் மூலம் ஆலையை இயக்கவும் தடை விதிக்கப்பட்டது.

1880இல், தூத்துக்குடி, மதுரை, அம்பாசமுத்திரம் உள்ளிட்ட இடங்களில் இங்கிலாந்தைச் சேர்ந்தவரால் மதுரா கோட்ஸ் ஆலை தொடங்கப் பட்டது. இங்கே உலகத்தரம் வாய்ந்த துணிகள் தயாரிக்கப்பட்டு வந்தன. 16,000 தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்த தொழிற்சாலைகளில் தற்போது 4000 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். இந்நிலையில் இந்த ஆலைக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுத்து வருவதால், இவர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தாமிரபரணி ஆறு பெரும் மாசு அடைந்து வரும் நிலையில், ஆலைக் கழிவுகள் ஆற்றில் கலக்கக் கூடாது என்று பொதுமக்கள் போர்க்கொடி தூக்கி வருகின்றனர். இருப்பினும், தமிழக அரசு உள்நோக்கத்துடன் இந்த ஆலைக்கு தடை விதித்துள்ளதாக தொழிற்சங்கள் குற்றம் சாட்டுகின்றன. இந்நிலையில், தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலக்கப்படவில்லை என ஆலை நிர்வாகிகள் கூறியுள்ளனர். இதுகுறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு ஆலையை மீண்டும் இயங்க வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என்று கூறியுள்ளனர்.

ALSO READ:  தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories