தென்காசியை தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்டம்: அமைச்சர் தகவல்

r b udhayakumar - 2026

தென்காசியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

சட்டமன்றத்தில் இன்று பொதுத் துறை மீதான மானியக் கோரிக்கை நடைபெற்று வருகிறது. இதற்கு முன்பாக நடைபெற்ற கேள்வி நேரத்தில் தென்காசியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் கோரிக்கை விடுத்தார்.

அதற்கு பதில் அளித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என்றால் 2,500 சதுர கிலோ மீட்டர் இருக்க வேண்டும், மேலும் வருவாய் கிராமங்கள் 200 இருக்க வேண்டும், ஆனால் 2,200 சதுர கிலோமீட்டர் மட்டுமே தென்காசியில் உள்ளது. வருவாய் கிராமங்கள் 195 மட்டுமே உள்ளது. புதிய மாவட்டம் உருவாக்க வேண்டிய தேவைகள் பூர்த்தி செய்யப்படாமல் உள்ளன.

ஆனாலும் தமிழக முதல்வர் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு திண்டுக்கல் மாவட்டம், தூத்துக்குடி மாவட்டம், நாகப்பட்டினம் மாவட்டம்  உள்ளிட்ட பல மாவட்டங்கள் தனியாக உருவாக்கப்பட்டன. கடந்த 2004ஆம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் கூட புதிதாக உருவாக்கப்பட்டது.

மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, தேவை இருப்பின் தென்காசியை தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்குவதற்கும் அரசு பரிசீலனை செய்து நடவடிக்கை மேற்கொள்ளும் என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories