வாட்ஸ்அப் அலப்பறைகள்; நேற்று பெருமாள் மீது நல்லபாம்பு! இன்று திருப்பதியானுக்கு காசுமாலை!

watsapp forwards naga - 2026

வாட்ஸ்அப் என்ற மெசேஜிங் செயலி வந்தாலும் வந்தது, அதை பயன்படுத்தும் நபர்கள், தாங்கள் ஆச்சரியமாக அல்லது அதிசயமாக எண்ணும் எதையும் அப்படியே பார்வர்ட் செய்து அடுத்தவரை இம்சிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். வந்த தகவல் தங்களுக்கு புதிதாகத் தெரிந்தால் போதும், அதைப் பெறுபவருக்கும் அது புதிய தகவலாகத்தான் இருக்கும் என்ற அதிபுத்திசாலித்தனத்துடன் அவற்றை பார்வர்ட் செய்து வைக்கின்றனர்.

உண்மையில், ஒரு தகவலை மற்றவருக்கு பார்வர்ட் செய்யும் போது, அவர்கள் பார்வர்ட் செய்யும் தகவலின் தன்மையைக் கொண்டே அந்த நபரின் புத்திசாலித்தனத்தையும், மனப்போக்கையும் அறிந்து கொள்ளலாம்.

கடந்த வாரம் திடீரென ஒரு வீடியோ பலரின் வாட்ஸ் அப் எண்களுக்கு பரிமாறப் பட்டது. என்ன ஏது என்று பார்க்காமல் விசாரிக்காமல் பலரும் அதனை பார்வர்ட் செய்து மகிழ்ந்தனர். மதுரை அருகே உள்ள திருமோகூர் பெருமாள் கோயிலில் பெருமாள் சிலை மீது நாகப் பாம்பு ஒன்று வேகவேகமாக ஊர்ந்து சென்று கையில் அமர்ந்து கொண்டு படம் எடுத்து வெகுநேரம் ஆடியது. பக்தர்கள் பரவசத்தில் கூச்சலிட்டபோதும் பாம்பு அப்படியே இருந்தது என்ற ரீதியில் பல்வேறு கதைகள். இதனை உண்மை என்று நம்பி, செய்தி இணையதளங்களிலும் இது செய்தியாக ஆக்கிரமித்தது.

உண்மையில் இந்த பெருமாளுக்கும் திருமோகூருக்கும் தொடர்பில்லை. லட்சுமி நரசிம்மப் பெருமாள் விக்ரஹத்தில் பாம்பு படமெடுத்தது என்றால், மேலே எழுதப் பட்டிருந்த பெயரோ லக்ஷ்மிநாராயணர் என்பது. மேலும், இந்த வீடியோ கடந்த இரு வருடங்களாகவே வாட்ஸ் அப்களில் சுற்றிச் சுற்றி வந்தது.

ALSO READ:  10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

அடுத்து இன்று இன்னொரு செய்தி. திருப்பதி பெருமாளுக்கு 1008 தங்க காசுகளை அடுத்த மாதம் அதாவது ஆகஸ்டில் கும்பாபிஷேகம் செய்யும் போது அணிவிக்க ரூ. 8 கோடி செலவில் தங்க காசு மாலை அணிவிக்கப் படுகிறது. விஜயவாடாவைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் வழங்குகிறார் என்பது.

அதற்காக படம் போட்டு, கூடவே அந்த நகை செய்யப்பட்ட செலவுக்கணக்கையும் பதிவு செய்து வாட்ஸ் அப்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இந்தச் செய்தி : ஆகஸ்ட் 16 அன்று கும்பாபிசேகம் காணும் திருப்பதி #ஏழுமலையானுக்கு  தங்க காசு மாலை …

tirupathi ornament - 2026

தங்கம் விலை : Rs.8,11,51,568.00
லேபர் சார்ஜ். : Rs.27,49,930.00
மொத்தம். : Rs.8,39014798.00

மொத்த எடை 28.645.100 கிலோ
#காசுகள் மொத்த எண்ணிக்கை 1008

#காசுமாலை ஆரம் ஐந்து வரிசைகள் கொண்டது
#ஆரம் 1: 184 காசுகள்
#ஆரம் 2 : 192 காசுகள்
#ஆரம் 3 : 201 காசுகள்
#ஆரம் 4. : 212 காசுகள்
#ஆரம் 5 : 219 காசுகள்

#காணிக்கை அளித்தவர் விஜயவாடாவை சார்ந்த தொழில் அதிபர் மன் தென ராமலிங்க ராஜு

ALSO READ:  சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

GRT ஜிவல்லரி செய்துகொடுத்துள்ளது தங்கம் ஒரு கிராமின் விலை 2833.00

thirupathi 1008 gold coin malai - 2026

இந்தச் செய்தி கடந்த வருடம் அதாவது 2017 செப்டம்பர் மாதம் வந்த செய்தி. விஜயவாடாவைச் சேர்ந்த மெந்தென ராமலிங்க ராஜு என்ற என்.ஆர்.ஐ., ரூ.8 கோடி செலவில், திருப்பதி பெருமாளுக்கு 1008 தங்க காசு மாலை செய்து, அதை ஆலயத்தில் வைத்து முதல்வர் சந்திரபாபு நாயுடு முன்னிலையில் வழங்கினார் என்பது செய்தி. அந்தப் படத்தை எடுத்துப் போட்டு ஏதோ இன்றுதான் இதை வழங்குவது போல் ஒரு புதிய தகவலை உருவாக்கி, வாட்ஸ் அப்பில் உலா வரச் செய்து வருகின்றனர்.

உண்மை என்ன என்று தெரியாமல், பலரும் அதனைப் பகிர்ந்து வருகின்றனர். இதனால் யாருக்கு என்ன லாபம், யார் இதனைச் செய்வது என்பது அனுமானிக்க இயலாத புரியாத புதிராகவே உள்ளது.

இருப்பினும், செய்திகளை பார்வர்ட் செய்பவர்கள்தான் சற்று முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும்.

ALSO READ:  சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories