ஒகேனக்கல்லில் நீர் வரத்து அதிகரிப்பு; மேட்டூர் அணை நீர்மட்டம் 75 அடியைத் தாண்டியது!

Published:

hokenakkal - 2026

ஒகேனக்கல்லில் நீர்வரத்து விநாடிக்கு 45 ஆயிரம் கனஅடியாக அதிகரித்த நிலையில், மேட்டூர் அணையில் நீர்மட்டம் 75 அடியைத் தாண்டியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கர்நாடகத்தின் கபினி அணையில் இருந்து விநாடிக்கு 46,250 கன அடி வீதம் காவிரியில் உபரி நீர் திறந்து விடப் படுகிறது. கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து விநாடிக்கு 3,700 கன அடி வீதம் காவிரியில் உபரி நீர் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதை அடுத்து, தமிழகத்துக்கு வரும் காவிரி நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஒகேனக்கல்லில் நீர்வரத்து விநாடிக்கு 45 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளதால், ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும்,பரிசல்களை இயக்கவும் 5ஆவது நாளாக மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

இந்நிலையில், மேட்டூர் அணையின் நீர் மட்டம் 75 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போது மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 38,916 கன அடியாக உள்ளது. அணையில் நீர் இருப்பு 37.48 டிஎம்சியாக உள்ளது.

ALSO READ:  100 கோடி மக்களுக்கு சமூகப் பாதுகாப்புக் கவசம்: பிரதமர் மோடி பெருமிதம்!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img