கோயில்களில் விளக்கேற்றி வழிபட தடை அகற்ற வேண்டும்: இந்து மக்கள் கட்சி, அமைச்சரிடம் புகார்!

sevur ramachandran hindumakkalkatchi - 2026

தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்  சேவூர் ராமச்சந்திரனை இன்று இந்து மக்கள் கட்சி மாநில தலைவர்  அர்ஜுன் சம்பத்  தலைமையில் இந்து மக்கள் கட்சி சென்னை மண்டல தலைவர்  S வீரமணி மற்றும்  இந்து அமைப்புகளைச் சார்ந்த நிர்வாகிகள் சென்று தலைமைச் செயலகத்தில் சந்தித்தனர்.

திருக்கோயில்களில் விளக்கு ஏற்றி பக்தர்கள் வழிபாடு செய்ய தடை விதிக்கப் பட்டதையும், இதனால் பக்தர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள் – விளக்கு தயாரிப்பில் ஈடுபடக் கூடிய மண்பாண்ட தயாரிப்பு தொழிலாளிகள் மற்றும் இந்தத் தொழில் முனைவோர்கள் பெருத்த நஷ்டத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள் என்பதையும், அமைச்சரிடம் இந்தக் குழு எடுத்துக் கூறியுள்ளது.

இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த இந்தக் குழுவினர் கூறியபோது,  அமைச்சர் இந்தப் பிரச்னைக்கு ஒரு நல்ல தீர்வு கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும் எனக் கேட்ட உடனேயே அறநிலையத்துறை ஆணையர் ஜெயாவிடம் உடனடியாக விளக்கு ஏற்றுவதற்கு தடை  விதிக்கக்கூடாது…  வாய்மொழி உத்தரவாக நீங்கள் பிறப்பித்திருந்தாலும் , உத்தரவை அறநிலையத்துறை அதிகாரிகள் சரியாக புரிந்து கொள்ளாமல் பக்தர்களுடைய மனம் நோகும்படி நடந்து கொள்ள கூடாது விளக்கு ஏற்றி வழிபாடு செய்ய தனியாக இடம் ஒதுக்கி தரவும் -தீ பரவாமல் தடுக்க தேவையான தீயணைப்பு கருவிகள் வைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இதனைக் கூறிய இந்து மக்கள் கட்சியின் ராம.ரவிக்குமார், அமைச்சரின் உத்தரவு சரியான வகையில் உடனே ஏற்கப்பட்டு விளக்கு ஏற்ற விதிக்கப்பட்ட தடை நீங்கும் என்று தாம் நம்புவதாகக் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories