கோயில்களில் விளக்கேற்றி வழிபட தடை அகற்ற வேண்டும்: இந்து மக்கள் கட்சி, அமைச்சரிடம் புகார்!

sevur ramachandran hindumakkalkatchi - 2026

தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்  சேவூர் ராமச்சந்திரனை இன்று இந்து மக்கள் கட்சி மாநில தலைவர்  அர்ஜுன் சம்பத்  தலைமையில் இந்து மக்கள் கட்சி சென்னை மண்டல தலைவர்  S வீரமணி மற்றும்  இந்து அமைப்புகளைச் சார்ந்த நிர்வாகிகள் சென்று தலைமைச் செயலகத்தில் சந்தித்தனர்.

திருக்கோயில்களில் விளக்கு ஏற்றி பக்தர்கள் வழிபாடு செய்ய தடை விதிக்கப் பட்டதையும், இதனால் பக்தர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள் – விளக்கு தயாரிப்பில் ஈடுபடக் கூடிய மண்பாண்ட தயாரிப்பு தொழிலாளிகள் மற்றும் இந்தத் தொழில் முனைவோர்கள் பெருத்த நஷ்டத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள் என்பதையும், அமைச்சரிடம் இந்தக் குழு எடுத்துக் கூறியுள்ளது.

இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த இந்தக் குழுவினர் கூறியபோது,  அமைச்சர் இந்தப் பிரச்னைக்கு ஒரு நல்ல தீர்வு கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும் எனக் கேட்ட உடனேயே அறநிலையத்துறை ஆணையர் ஜெயாவிடம் உடனடியாக விளக்கு ஏற்றுவதற்கு தடை  விதிக்கக்கூடாது…  வாய்மொழி உத்தரவாக நீங்கள் பிறப்பித்திருந்தாலும் , உத்தரவை அறநிலையத்துறை அதிகாரிகள் சரியாக புரிந்து கொள்ளாமல் பக்தர்களுடைய மனம் நோகும்படி நடந்து கொள்ள கூடாது விளக்கு ஏற்றி வழிபாடு செய்ய தனியாக இடம் ஒதுக்கி தரவும் -தீ பரவாமல் தடுக்க தேவையான தீயணைப்பு கருவிகள் வைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இதனைக் கூறிய இந்து மக்கள் கட்சியின் ராம.ரவிக்குமார், அமைச்சரின் உத்தரவு சரியான வகையில் உடனே ஏற்கப்பட்டு விளக்கு ஏற்ற விதிக்கப்பட்ட தடை நீங்கும் என்று தாம் நம்புவதாகக் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories