நடு ரோட்டில் கொஞ்சி விளையாடிய சிறுத்தைகள்; வாகன ஓட்டிகள் திகைப்பு!

siruthai in sathyamangalam road - 2026

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப் பாதையில் இரண்டு சிறுத்தைகள் கொஞ்சி விளையாடி சண்டையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வாகன ஓட்டிகளை எச்சரித்து அனுப்பினர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள அடர்ந்த வனப் பகுதியில் உள்ள திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டைஊசி வளைவுகள் உள்ளன. இப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. வனத்துறையினரும் ஆங்காங்கே சிறுத்தைகள் நடமாடும் பகுதி என்ற வாசகங்கள் அடங்கிய போர்டுகள் வைத்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று மாலை 5.30 மணி அளவில் 2 சிறுத்தைகள் திம்பம் மலைப்பாதை 5 வது கொண்டை ஊசி வளைவு அருகே நடமாடியதோடு சாலையின் நடுவே படுத்துக் கொண்டு கொஞ்சி விளையாடியபடி சண்டையிட்டுள்ளன.

இதைக் கண்ட வாகன ஓட்டிகள் வாகனங்களை சாலையில் நிறுத்தியபடி செல்போனில் படம்பிடிக்க ஆர்வம் காட்டினர். இது குறித்து தகவலறிந்த வனத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாகன ஓட்டிகளை எச்சரித்தனர்.

இதை அடுத்து 2 சிறுத்தைகளும் மெதுவாக எழுந்து சாலையிலிருந்து வனப் பகுதிக்குள் ஓடி மறைந்தன. பகல் நேரத்தில் சிறுத்தைகள் சாலையில் சண்டையிட்ட காட்சி வாகன ஓட்டிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

திம்பம் மலைப்பாதை வழியாக பயணிப்போர் மலைப்பாதையில் இறங்கி நிற்பது, சாலையோர தடுப்புச் சுவரில் அமர்ந்து உணவருந்துவது, புகைப்படம் எடுப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என வாகன ஓட்டிகளிடம் வனத் துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories