நடு ரோட்டில் கொஞ்சி விளையாடிய சிறுத்தைகள்; வாகன ஓட்டிகள் திகைப்பு!

siruthai in sathyamangalam road - 2026

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப் பாதையில் இரண்டு சிறுத்தைகள் கொஞ்சி விளையாடி சண்டையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வாகன ஓட்டிகளை எச்சரித்து அனுப்பினர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள அடர்ந்த வனப் பகுதியில் உள்ள திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டைஊசி வளைவுகள் உள்ளன. இப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. வனத்துறையினரும் ஆங்காங்கே சிறுத்தைகள் நடமாடும் பகுதி என்ற வாசகங்கள் அடங்கிய போர்டுகள் வைத்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று மாலை 5.30 மணி அளவில் 2 சிறுத்தைகள் திம்பம் மலைப்பாதை 5 வது கொண்டை ஊசி வளைவு அருகே நடமாடியதோடு சாலையின் நடுவே படுத்துக் கொண்டு கொஞ்சி விளையாடியபடி சண்டையிட்டுள்ளன.

இதைக் கண்ட வாகன ஓட்டிகள் வாகனங்களை சாலையில் நிறுத்தியபடி செல்போனில் படம்பிடிக்க ஆர்வம் காட்டினர். இது குறித்து தகவலறிந்த வனத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாகன ஓட்டிகளை எச்சரித்தனர்.

இதை அடுத்து 2 சிறுத்தைகளும் மெதுவாக எழுந்து சாலையிலிருந்து வனப் பகுதிக்குள் ஓடி மறைந்தன. பகல் நேரத்தில் சிறுத்தைகள் சாலையில் சண்டையிட்ட காட்சி வாகன ஓட்டிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

திம்பம் மலைப்பாதை வழியாக பயணிப்போர் மலைப்பாதையில் இறங்கி நிற்பது, சாலையோர தடுப்புச் சுவரில் அமர்ந்து உணவருந்துவது, புகைப்படம் எடுப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என வாகன ஓட்டிகளிடம் வனத் துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories