வேலை கிடைத்தால் வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்கும்

Published:

  தமிழகத்தில் எந்த அரசு பணியில் சேரவேண்டும் என்றாலும் தகுதி இருந்தும் பணம் இல்லாமல் ஓதுக்கப்படும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு அதிகரித்துக்கொண்டே செல்கிறது தற்போது பல்வேறு மாவட்டங்களில் ஊரக வளர்ச்சித்துறை மூலமாக சில ஓன்றியங்களில் ஓட்டுனர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்கள் போடப்பட்டன குறிப்பாக ஒரு ஓன்றியத்தில் 4பதவிகள் காலியாக இருந்தால் ஓரு பதவியை அமைச்சர் அல்லது மாவட்டச்செயலாளர் மற்றொரு பதவியை ஓன்றியக்குழுத்தலைவர் இன்னொரு பதவியை மாவட்ட கவுன்சிலர் அடுத்த ஓன்றை ஆணையர் ஆகிய நான்கு பதவிகளையும் பிரித்து எடுத்து பேரம் பேசப்படுகின்றது 3லட்சம் முதல் 7லட்சம் வரை கொடுத்தால் தான் வேலை நிட்சயம் இதனால் ஏழையாக இருப்பவர்கள் தகுதி இருந்தும் பணம் இல்லாமல் தடுமாறுகிறார்கள் அது போன்று தற்போது 22ம்தேதி தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை மூலமாக ஆய்வக உதவியாளர் பதவிக்கு 4362காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டது அதற்கான விண்ணப்பங்களை 24ம்தேதி முதல் 6ம்தேதி வரைக்கும் பெறப்படும் வயது 18முதல் 35வயதுக்குள் இருத்தல் குறைந்தபட்ச பொதுக்கல்வி தகுதியான பள்ளியிறுதி வகுப்பு(இடைநிலைக்கல்வி)அல்லது அதற்கு சமமான கல்வியில் தேர்ச்சி பெற்று மேல்நிலைப்பள்ளிக்கல்வி அல்லது கல்லூரிக்கல்வி சேர்வதற்கான தகுதி பெற்றிருத்தல் வேண்டும் மாற்றுத்திறனாளிகளுக்கான 3சதவீதம் இடஓதுக்கீடுவிதி ஆதரவற்ற விதவைகள் முன்னாள் இரானுவத்திற்கான நியமன ஓதுக்கீடு போன்றவைகள் இதற்கு பொருந்தும் என்றனர் இதற்கான விண்ணப்பம் பெறும் இடங்களை மாவட்ட ஆட்சியர் மற்றும் முதன்மைக்கல்வி அலுவலர் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டன இதில் புதுக்கோட்டையில் பேராங்குளம் தூயமரியன்னை மேல்நிலைப்பள்ளி பெருங்ளுர் அரசு மேல்நிலைப்பள்ளி கீரனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி திருமயம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இலுப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆலங்குடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அறந்தாங்கி அரசுமகளிர் மேல்நிலைப்பள்ளி மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் பதிவு செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடதக்கது ஆனால் விண்ணப்பம் முடியும் தேதியும் இன்னும் வரவில்லை தேர்வும் இன்னும் வரவில்லை ஆனால் பதவிக்கு பணம் எவ்வளவு என்பது நியமிக்கப்பட்டுள்ளது என்று பதிவு முடித்தும் வெளியில் வருபவர்கள் புலம்புகின்றனர் இது குறித்து திருவரங்குளத்தை சேர்ந்த இலக்கியா என்பவர் கூறியது:நான் மிகவும் கஸ்டப்பட்ட குடும்பத்தைச்சேர்ந்தவர் என்னுடைய அப்பாவும் நோய் அவதிப்பட்டு இறந்துவிட்டார் அம்மாவுக்கும் வேலைக்கு போவதற்கு உடல்சரியில்லை தங்கையும் படிக்கிறார் வேற உதவிக்கு ஆள்இல்லை என்ற காரணத்தினால் நான் தான் வேலைக்கு போகிறேன் அந்த ஊதியம் மாத செலவுக்கு போதுமானதாக இல்லை இந்த வேலை கிடைத்தால் நம்முடைய வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்கும் ஆனால் மக்கள் பேசுவதைப்பார்த்தால் பணம்இல்லாமல் இந்த பதவியை வாங்கமுடியாது என்றே தோன்றுகிறது அதுவும் புதுக்கோட்டையில் மொத்தமே 176காலிப்பணியிடங்கள் தான் என்று அறிவித்துள்ளார்கள் நான் போய் ஒரு பள்ளியில் பதிவு செய்யும்போதே 1000க்கும் மேற்பட்டவர்கள் வரிசையில் நின்றனர் குறைந்தபட்சம் புதுக்கோட்டையில் தேதி முடியும் தருவாயில் 1லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பதிவுசெய்வார்கள் போல இருக்கின்றது தமிழக முன்னாள்; முதல்வர் ஜெயலலிதா இந்த விசயத்தில் தலையீட்டு பணம் யாரும் பெறாமல் பதவிகளை வழங்குவதற்கு தயாராகவேண்டும் அப்படி நடந்தால் மிகவும் மகிழ்ச்சி அதோடு சேர்ந்து மக்கள் மனதிலும் மக்கள் முதல்வர் மக்கள் முதல்வராகவே நீடிப்பார் என்றார் செய்தி: பொ.ஜெயச்சந்திரன், புதுக்கோட்டை

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img