​திருவரங்குளத்தில் அக்னி முதல் நாளில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி

Published:

a994b74ec437363d64f7a520e0610d3e - 2026 ​திருவரங்குளத்தில் அக்னி முதல் நாளில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். புதுக்கோட்டை திருவரங்குளம் பகுதியில் அதிகமான விவசாய நிலங்கள் உள்ளது இதனால் பெரும்பாலோனோர் தங்களது விவசாயத்திற்கு மழையை நம்பியுள்ளனர் இந்த சித்திரை மாதத்தொடக்கத்தில் ஓரளவு மழைபெய்தது இதனால் இப்பகுதியில் உள்ளவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர் அதன்பிறகு வெயில் சுட்டரித்தது அதைவிட புதுக்கோட்டை மாவட்டத்தில் தினந்தோறும் சராசரியாக 95முதல் 100டிகிரி வரை வெயில் அளவு இருந்தது என்பது குறிப்பிடதக்கது 4b7472e121873c1fa9213dc7ed3e7173 - 2026அதிக கிணறுகளில் தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் தவித்தனர் ஆனால் இன்று அக்னி நட்சத்திரம் ஆரம்பமாவதால் மழைபெய்ய வாய்ப்பு இருக்கிறது என்ற தகவலை வானிலை அறிக்கை மூலம் சொன்னவுடன் வயல்வெளிகளில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தவர்கள் வானத்தையை தொடர்ந்து கவனித்துக்கொண்டு இருந்தார்கள் பிறகு 2.30முதல் வானம்மேகமூட்டத்துடன் காணப்பட்டதால்; சில விவசாயிகள் மழைவரவேண்டும் என்று கடவுளை வேண்டிக்கொண்டு இருந்தனர் அதன்விளைவாக 2.45முதல் தொடங்கிய மழை 3.50வரை பெய்தது இதனால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர் அது மட்டுமல்ல திருவரங்குளத்தில் அனைத்து மதம் மற்றும் ஜாதியினர் குளிக்கும் குளமானது ஓரளவு நிறைந்தது செய்தி- பொ.ஜெயச்சந்திரன் புதுக்கோட்டை

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img