புதிய தலைமுறை நிர்வாகத்தின் இந்து விரோத நிலைப்பாடு: ஹெச்.ராஜா கண்டனம்

Published:

h raja - 2026

சென்னை: புதிய தலைமுறை செய்தி தொலைக்காட்சியின் காலை நேர புதுப்புது அர்த்தங்கள் நிகழ்ச்சியில், நெறியாளர் கார்த்திகேயன், பெண் தெய்வங்கள் குறித்துப் பேசிய போது, இழிவான கருத்தைத் தெரிவித்ததற்கு, இந்து இயங்கங்கள் மட்டுமல்லாது பார்வையாளர்கள் பலரும் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறித்து விவாதம் நடந்த போது, பெண் தெய்வங்கள், பெண்கள் தீட்டு, என்றெல்லாம் சொல்லி, இந்து மத நம்பிக்கைகளை இழிவு படுத்தும் விதமாக கருத்து  கூறினார். இதற்கு சமூக வலைத்தளங்களில் பலத்த எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில், பாஜக., தேசியச் செயலர் ஹெச்.ராஜா இதற்கு கண்டனம் தெரிவித்தார். அவர் இது குறித்துக் கூறியபோது…

நெறியாளர் என்கிற போர்வையில் புதிய தலைமுறை தொலைக் காட்சியில் கார்த்திகேயன் இந்து தெய்வங்களை கொச்சைப்படுத்தி பேசியுள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன்.

இந்த தொலைக்காட்சி இது போன்று தொடர்ந்து செயல்பட்டு வருவதை புறந்தள்ள முடியாது. இவர்கள் முதலில் இந்து பெண்கள் புனிதமாக கருதும் தாலியை இழிவு செய்தனர்.
தீபாவளி தமிழர்கள் பண்டிகையா என்று விவாதம் செய்தனர். ஆனால் அந்நிய நாட்டில் தோன்றிய மதத்தின் விழாவை பாதிரியார்களை அழைத்து வந்து பாட்டுப்பாடி கொண்டாடினர்.

ALSO READ:  IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

நேற்று இந்து தெய்வங்களை இழிவாக பேசிய கார்த்திகேயன் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.

புதிய தலைமுறை தொலைக் காட்சியின் நிர்வாகத்தின் நிலைப்பாடு தொடர்ந்து இந்து விரோதமாக இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

– என்று பாஜ., தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img