புதிய தலைமுறை நிர்வாகத்தின் இந்து விரோத நிலைப்பாடு: ஹெச்.ராஜா கண்டனம்

h raja - 2026

சென்னை: புதிய தலைமுறை செய்தி தொலைக்காட்சியின் காலை நேர புதுப்புது அர்த்தங்கள் நிகழ்ச்சியில், நெறியாளர் கார்த்திகேயன், பெண் தெய்வங்கள் குறித்துப் பேசிய போது, இழிவான கருத்தைத் தெரிவித்ததற்கு, இந்து இயங்கங்கள் மட்டுமல்லாது பார்வையாளர்கள் பலரும் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறித்து விவாதம் நடந்த போது, பெண் தெய்வங்கள், பெண்கள் தீட்டு, என்றெல்லாம் சொல்லி, இந்து மத நம்பிக்கைகளை இழிவு படுத்தும் விதமாக கருத்து  கூறினார். இதற்கு சமூக வலைத்தளங்களில் பலத்த எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில், பாஜக., தேசியச் செயலர் ஹெச்.ராஜா இதற்கு கண்டனம் தெரிவித்தார். அவர் இது குறித்துக் கூறியபோது…

நெறியாளர் என்கிற போர்வையில் புதிய தலைமுறை தொலைக் காட்சியில் கார்த்திகேயன் இந்து தெய்வங்களை கொச்சைப்படுத்தி பேசியுள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன்.

இந்த தொலைக்காட்சி இது போன்று தொடர்ந்து செயல்பட்டு வருவதை புறந்தள்ள முடியாது. இவர்கள் முதலில் இந்து பெண்கள் புனிதமாக கருதும் தாலியை இழிவு செய்தனர்.
தீபாவளி தமிழர்கள் பண்டிகையா என்று விவாதம் செய்தனர். ஆனால் அந்நிய நாட்டில் தோன்றிய மதத்தின் விழாவை பாதிரியார்களை அழைத்து வந்து பாட்டுப்பாடி கொண்டாடினர்.

ALSO READ:  ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

நேற்று இந்து தெய்வங்களை இழிவாக பேசிய கார்த்திகேயன் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.

புதிய தலைமுறை தொலைக் காட்சியின் நிர்வாகத்தின் நிலைப்பாடு தொடர்ந்து இந்து விரோதமாக இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

– என்று பாஜ., தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.

2 COMMENTS

  1. இந்தியாவில் முன்பிருந்தே இருந்தவர்கள் அனைவருமே இந்துக்கள்தான் , பின்புதான் இஸ்லாம் மற்றும் கிறிஸ்து மதத்தினர் வந்தனர். இந்த வரலாறு கார்த்திகேயனுக்கு தெரியாமல் இருக்குமா? அவர் நம் பாரதத்தில்தான் பிறந்தாரா ? என்பது சந்தேகமாக உள்ளது, முதலில் அவர் இதற்கு பதில் சொல்லட்டும், பிறகு ஊடகத்தில் நிகழ்ச்சிகளை தொகுக்கட்டும்.

  2. Most of the persons appearing on the screen are biased, half baked, and have the desire to be popular by making irrelevant and nonsense statement. Their knowledge is limited and without knowing any subject make stupid statement. This is not confined to Pudiya Thalaimurai. The education system also to be questioned in TN as it only preaches Annadurai, Karunanidhi Jaya MGR as Gods and Goddesses without crossing the boarder of the state. Anyonecan be surprised if they had known about their leaders and the preachings. E.g. Myth about Periyar.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories