சேலத்தில் அரசு நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு சென்னை திரும்பும் எடப்பாடி!

Published:

edappadi pazanisamy - 2026

சேலத்தில் நாளை நடைபெற இருந்த அரசு விழாக்களில் பங்கேற்பதை ரத்து செய்துவிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று இரவு சென்னை திரும்புகிறார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோவை சென்று அங்கிருந்து விமானத்தில் இரவு சென்னை திரும்புகிறார் என்று கூறப்பட்டது.

சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ள திமுக., தலைவர் கருணாநிதியின் உடல் நிலை குறித்து விசாரிக்க, இன்று நள்ளிரவு 1 மணி அளவில் காவேரி மருத்துவமனைக்கு எடப்பாடி பழனிசாமி வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், கருணாநிதியின் பேரன்கள் உள்ளிட்ட உறவினர்கள் அனைவரும் காவேரி மருத்துவமனைக்கு வந்துள்ளனர். கருணாநிதியின் நெருங்கிய உறவினர்கள், மிக முக்கியப் பிரமுகர்கள் இவர்களைத் தவிர மற்றவர்களையும் தொண்டர்களையும் காவேரி மருத்துவமனை உள்ள பகுதியில் இருந்து அப்புறப் படுத்தும் பணிகளை போலீஸார் மேற்கொண்டுள்ளனர். தொண்டர்கள் ஒவ்வொருவராக போலீஸாரால் அப்புறப் படுத்தப் பட்டு வருகின்றனர்.

இதனிடையே காவல் ரோந்து வாகனங்களுடன் காவலர்கள் அனைவரும் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்திற்கு வருமாறு காவல் துறை மேலிட உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

ALSO READ:  ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கருணாநிதியின் இல்லத்திற்கு செல்லக்கூடிய அனைத்து வழிகளிலும் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது. கருணாநிதியின் இல்லம் இருக்கும் சென்னை கோபாலபுரம் பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப் பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப் பட்டு வருகின்றனர். அதே போல் காவேரி மருத்துவமனை அருகே தடுப்புகளை தாண்டி தொண்டர்கள் வர முடியாதபடி போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img