சிலைக் கடத்தல் வழக்குகள் சிபிஐ.,க்கு மாற்றம்: அறிவிப்பாணை வெளியீடு!

pon manickavel - 2026

சென்னை: சிலைக்கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ-க்கு மாற்ற கொள்கை முடிவு எடுத்ததாக நேற்று உயர் நீதிமன்றத்தில் அரசு தெரிவித்த படி, சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டு தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.

சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பாக தமிழக எல்லைக்குள் விசாரணை நடத்திட சிபிஐ-க்கு அனுமதி அளித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பாணையில் குறிப்பிடப் பட்டுள்ளது.

ஐ.ஜி.பொன்மாணிக்க வேலின் விசாரணையில் நம்பிக்கை இல்லை, ஒரு வருடமாக வழக்கில் முன்னேற்றம் இல்லை என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பொதுமக்களிடையே சில சந்தேகங்கள் எழுந்திருப்பதை நாம் மறுப்பதற்கில்லை. சிபிஐ., விசாரணைக்கு உத்தரவிட்டால் மட்டும் இந்த வழக்குகள் விரைந்து விசாரிக்கப்பட்டு விடுமா என்று கேள்வி எழுப்புகின்றனர் பொதுமக்கள்.

பொன்.மாணிக்கவேலை பணி இட மாற்றம் செய்வதிலும், பொன் மாணிக்கவேலை இந்த விசாரணையில் இருந்து கழற்றி விடுவதிலுமே அரசு குறியாக இருந்திருப்பது தெரியவந்துள்ளது. ஆனால், பொன் மாணிக்கவேல் விசாரணைக்கு உயர் நீதிமன்றம் ஆதரவாக கருத்து தெரிவித்ததும்,  அவரை விசாரணையில் இருந்து  மாற்ற இயலாது என்ற சூழ்நிலையில், சிபிஐ வசம் இந்த வழக்கின் விசாரணையை ஒப்படைத்துள்ளது தமிழக அரசு என்றே கருதமுடிகிறது.

ALSO READ:  பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!

சிபிஐ விசாரணை என்பது இப்போதெல்லாம் வெறும் கண் துடைப்பாக மட்டுமே பார்க்கப் படுகிறது. சிபிஐ விசாரித்து வந்த வழக்குகளில் பெரிய அளவில் குற்றவாளிகளுக்கு  தண்டனை பெற்றுத் தர இயலவில்லை.

குறிப்பாக, மோடி ஆட்சிக்கு வந்த இந்த 4 வருடங்களில் சிபிஐ என்பது, அரசின் வேகத்துக்கு ஈடு கொடுத்து விசாரணையை நடத்திமுடித்ததாக ஒரு வழக்கைக் கூட உறுதியாகக் காட்ட இயலவில்லை.

ராமஜெயம் வழக்கு சிபிஐ வசம்தான் உள்ளது. வழக்கு எந்த நிலையில் இருக்கிறது என்றே தெரியவில்லை.. 

2 ஜி வழக்கில் சிபிஐயை சவுக்கால் விளாசியது. பல வருடமாக ஆதாரம் சமர்ப்பிக்காமல் அதோ இதோ என ஒவ்வோரு முறையும் செட்டி நாட்டு சீமான் சிதம்பரம் மிக எளிதில் முன்ஜாமீன் பெறுகிறார்.  அவருக்கு மட்டும் நீதிமன்றங்கள் எப்படியோ ஜாமீன் கொடுத்து விடுகின்றன. நீங்க நாட்கள் அவகாசம் கொடுத்து கைது

சேலம் ரயில் கொள்ளை(7.5 கோடி பழைய நோட்டு) வழக்கு இன்னமும் போலீசார் வசமிருக்கிறது.. இதை சிபிஐ யிடம் மாற்றுங்கள் என யாரும் கேகவில்லை. நிலைமை இப்படி இருக்க சிபிஐக்கு மாற்றம் என்பது அரசாங்கம் தன் குடையின் கீழ் உள்ள கருப்பு ஆடுகளை காப்பாற்ற முயற்சிக்கிறது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி…

ALSO READ:  சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

ஒரு விவகாரத்தை ஆறப்போட கமிஷனை போடு என்பது புதிய பழமொழி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Topics

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories