வாரி இறைக்கிறார் தினகரன்; இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது : திவாகரன் கேள்வி

Published:

divagaran - 2026

டிடிவி தினகரன் பணத்தை வாரி இறைக்கிறார் அவருக்கு இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது என்று கேள்வி எழுப்பியுள்ளார் திவாகரன்.

தினகரன் உறவினரும் அண்ணா திராவிடர் கழக தலைவருமான திவாகரன் தஞ்சாவூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர்  டிடிவி தினகரன் பணத்தை வாரி இறைக்கிறார் என்று குற்றம் சாட்டினார்.

அவர் மேலும் கூறிய போது, விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதா மரணம் குறித்து என்னிடம் கேள்வி கேட்கவில்லை. நான் எந்தத் தேர்தலிலும் போட்டியிட மாட்டேன் என்று கூறினார்.

தினகரன் குறித்த கேள்விக்கு பதிலளித்த போது, டிடிவி தினகரன் பணத்தை வாரி இறைக்கிறார். அவருக்கு இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது…? மன்னார்குடி கூட்டத்துக்கும் டோக்கன் கொடுத்து குக்கர் தருவதாகச் சொல்லி கூட்டத்தைக் கூட்டியுள்ளார். அதை எப்படி கொடுப்பார்?

சிலைக் கடத்தல் வழக்கு உள்பட அரசின் செயல் ஒவ்வொன்றும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. பொன். மாணிக்கவேல் ஒரு நேர்மையான அதிகாரி.  அப்படி இருக்கும் போது, சிலைக் கடத்தல் வழக்கை ஏன் சிபிஐக்கு மாற்றுகிறார்கள்  என்பது தெரியவில்லை.

ALSO READ:  நீரில்லா வைகை; வறண்டு போன மணலாற்றில் ஆடி அமாவாசை வழிபாடு!

உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதில் அரசுக்கு விருப்பமில்லை என்பதாலேயே தள்ளிப் போடுகிறது.

சென்னைப் பல்கலைக் கழகம் மட்டுமல்ல, தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் அனைத்திலுமே முறைகேடுகள் நடக்கின்றன என்று கூறினார் திவாகரன்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img