அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதாவுக்கு நிபந்தனை ஜாமின்!

Published:

kavitha hrnce - 2026

சென்னை: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் சோமாஸ்கந்தர் சிலை செய்யப்பட்டதில் முறைகேடு நிகழ்ந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப் பட்ட  இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் கவிதாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இன்று நிபந்தனை ஜாமின் வழங்கியது.

சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்ட கவிதா,  ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட இன்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

கவிதாவின் ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதிகள்,  கவிதா, திருச்சியில் 30 நாட்கள் தங்கியிருந்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு விசாரணை அதிகாரி முன்பு தினமும் காலை ஆஜராகி கையெழுத்திட வேண்டும்; தேவைப்படும்போது கும்பகோணத்தில் உள்ள விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்; சாட்சிகளை கலைக்கக் கூடாது; விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என்று கூறி நிபந்தனை ஜாமின் வழங்கினர்.

ALSO READ:  பழனி கோயில் நில விவகாரத்தில் கைதானவர் மரணம்; சந்தேகம் எழுவதாக இந்து முன்னணி குற்றச்சாட்டு!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img