விசாரணையில் தவறு இருக்கிறது..! வேணு சீனிவாசனுக்கு ஆதரவாக மாஃபா பாண்டியராஜன்!

mafoi pandiarajan - 2026

சென்னை: சிலைக் கடத்தல் குறித்து விசாரித்து வரும் போலீஸார் பதிவு செய்துள்ள வழக்கில், தான் கைதாகாமல் இருக்க முன் ஜாமீன் பெற்றுள்ள டிவிஎஸ் குழும தலைவர் வேணு சீனிவாசனுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருக்கிறார் தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள மிகவும் பழைமையான கல்லாலான மயில் சிலை ஒன்று மாற்றப்பட்டுள்ளதாக பக்தர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. இதில், அப்போது கோயில் இணை ஆணையராக இருந்த திருமகள், அறங்காவலர் குழுத் தலைவராக இருந்த வேணு சீனிவாசன் ஆகியோரையும் இந்த வழக்கில் பதிவு செய்தனர் போலீஸார்.

இந்நிலையில் நேற்று இரவு டிவிஎஸ் குழும தலைவர் வேணு சீனிவாசன் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஏற்கெனவே காஞ்சிபுரம் கோயில் வழக்கு உள்ளிட்ட வழக்குகளில் திருமகளும் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்து அவரை கைது செய்வதற்கு 6 வார காலம் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது நீதிமன்றம்.

இந்த நிலையில் வேணு சீனிவாசன் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை விசாரித்து அதே போல், 6 வார கால இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வழக்குக்குத் தேவையான விசாரணைகளை மட்டும் நேரில் சந்தித்து நடத்தலாம், கைது செய்யக் கூடாது என்று நீதிமன்றம் கூறியது.

இதனிடையே, வேணு சீனாவானுக்கு ஆதரவாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் குரல் கொடுத்துள்ளார். அதில் சிலை கடத்தலில் வேணு சீனிவாசனுக்கு தொடர்பு என்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. அவர் மிகவும் நல்லவர். விசாரணையில் எதோ தவறு இருக்கிறது. என்னால் இதை நம்ப இயலவில்லை என்று கூறியுள்ளார். #mafoikprajan

1 COMMENT

  1. அவசரம் அவசரமாக, யாரையோ திருப்திப்படுத்த, TVS அதிபர் வேணுஸ்ரீனிவாசனை தொடர்பு படுத்தியது மிகவும் வேதனை கொடுக்கிறது. நன்கு விசாரித்து, அவரை இந்த வழக்கிலிருந்து நீதிமன்றமே விடுவிக்கலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories