விசாரணையில் தவறு இருக்கிறது..! வேணு சீனிவாசனுக்கு ஆதரவாக மாஃபா பாண்டியராஜன்!

mafoi pandiarajan - 2026

சென்னை: சிலைக் கடத்தல் குறித்து விசாரித்து வரும் போலீஸார் பதிவு செய்துள்ள வழக்கில், தான் கைதாகாமல் இருக்க முன் ஜாமீன் பெற்றுள்ள டிவிஎஸ் குழும தலைவர் வேணு சீனிவாசனுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருக்கிறார் தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள மிகவும் பழைமையான கல்லாலான மயில் சிலை ஒன்று மாற்றப்பட்டுள்ளதாக பக்தர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. இதில், அப்போது கோயில் இணை ஆணையராக இருந்த திருமகள், அறங்காவலர் குழுத் தலைவராக இருந்த வேணு சீனிவாசன் ஆகியோரையும் இந்த வழக்கில் பதிவு செய்தனர் போலீஸார்.

இந்நிலையில் நேற்று இரவு டிவிஎஸ் குழும தலைவர் வேணு சீனிவாசன் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஏற்கெனவே காஞ்சிபுரம் கோயில் வழக்கு உள்ளிட்ட வழக்குகளில் திருமகளும் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்து அவரை கைது செய்வதற்கு 6 வார காலம் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது நீதிமன்றம்.

இந்த நிலையில் வேணு சீனிவாசன் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை விசாரித்து அதே போல், 6 வார கால இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வழக்குக்குத் தேவையான விசாரணைகளை மட்டும் நேரில் சந்தித்து நடத்தலாம், கைது செய்யக் கூடாது என்று நீதிமன்றம் கூறியது.

இதனிடையே, வேணு சீனாவானுக்கு ஆதரவாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் குரல் கொடுத்துள்ளார். அதில் சிலை கடத்தலில் வேணு சீனிவாசனுக்கு தொடர்பு என்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. அவர் மிகவும் நல்லவர். விசாரணையில் எதோ தவறு இருக்கிறது. என்னால் இதை நம்ப இயலவில்லை என்று கூறியுள்ளார். #mafoikprajan

1 COMMENT

  1. அவசரம் அவசரமாக, யாரையோ திருப்திப்படுத்த, TVS அதிபர் வேணுஸ்ரீனிவாசனை தொடர்பு படுத்தியது மிகவும் வேதனை கொடுக்கிறது. நன்கு விசாரித்து, அவரை இந்த வழக்கிலிருந்து நீதிமன்றமே விடுவிக்கலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories