டூவீலரை விடுவிக்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல்துறை ஆய்வாளர் கைது!

police ravindran horz - 2026

மேட்டூர் அருகே ரூ 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல்துறை ஆய்வாளர் மற்றும் தலைமை காவலர் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

மேட்டூர் காவல் உட்கோட்டத்தில் உள்ள கொளத்தூர் காவல் நிலைய பகுதியில் உள்ளது சின்ன தண்டா. இங்கு ஆடி 18 பண்டிகையின் போது சேவல் சண்டை நடத்தப்பட்டது. மேட்டூர் மட்டும் இல்லாமல் சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் சேவல்கள் கொண்டு வரப்பட்டு லட்சக் கணக்கில் பந்தயம் கட்டி சேவல் சண்டை நடத்தப்பட்டது.

இதனை நூற்றுக்கணக்கானோர் வேடிக்கை பார்த்தனர். இந்தத் தகவல் அறிந்த கொளத்தூர் போலீசார் திடீரென சேவல் சண்டை நடந்த பகுதிக்குச் சென்றனர். அப்போது வேடிக்கை பார்த்தவர்கள் தங்களது மோட்டார் சைக்கிள்களை விட்டு விட்டு ஓடினர். அதன் பிறகு பார்வையாளர்கள் விட்டுச் சென்ற மோட்டார் சைக்கிள்களை போலீசார் காவல் நிலையத்துக்கு எடுத்து வந்தனர்.

வழக்கு பதியாமல் வாகனத்தைக் கொடுக்க காவல் ஆய்வாளர் ரவீந்திரன் மற்றும் போலீசார் பணம் கேட்டு நிர்பந்தம் செய்துள்ளனர். பலர் பணம் கொடுத்து மோட்டார் சைக்கிளை எடுத்துச் சென்றனர்.

ஆனால் மேட்டூர் பகுதியைச் சேர்ந்த செந்தில் என்பவர் சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இந்தப் புகாரை அடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை புகார் செய்தவரிடம் கொடுத்து அனுப்பினர், அதையடுத்து இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆலோசனைப்படி ஆய்வாளர் ரவீந்தரனிடம் செந்தில் ரூ 5 ஆயிரம் லஞ்சம் கொடுத்தார். லஞ்ச ஒழிப்பு போலீஸார் கொடுத்தனுப்பிய ரசாயனம் கலந்த ரூபாய் நோட்டுகளை ஆய்வாளர் வாங்கிய போது லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories