டூவீலரை விடுவிக்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல்துறை ஆய்வாளர் கைது!

police ravindran horz - 2026

மேட்டூர் அருகே ரூ 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல்துறை ஆய்வாளர் மற்றும் தலைமை காவலர் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

மேட்டூர் காவல் உட்கோட்டத்தில் உள்ள கொளத்தூர் காவல் நிலைய பகுதியில் உள்ளது சின்ன தண்டா. இங்கு ஆடி 18 பண்டிகையின் போது சேவல் சண்டை நடத்தப்பட்டது. மேட்டூர் மட்டும் இல்லாமல் சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் சேவல்கள் கொண்டு வரப்பட்டு லட்சக் கணக்கில் பந்தயம் கட்டி சேவல் சண்டை நடத்தப்பட்டது.

இதனை நூற்றுக்கணக்கானோர் வேடிக்கை பார்த்தனர். இந்தத் தகவல் அறிந்த கொளத்தூர் போலீசார் திடீரென சேவல் சண்டை நடந்த பகுதிக்குச் சென்றனர். அப்போது வேடிக்கை பார்த்தவர்கள் தங்களது மோட்டார் சைக்கிள்களை விட்டு விட்டு ஓடினர். அதன் பிறகு பார்வையாளர்கள் விட்டுச் சென்ற மோட்டார் சைக்கிள்களை போலீசார் காவல் நிலையத்துக்கு எடுத்து வந்தனர்.

வழக்கு பதியாமல் வாகனத்தைக் கொடுக்க காவல் ஆய்வாளர் ரவீந்திரன் மற்றும் போலீசார் பணம் கேட்டு நிர்பந்தம் செய்துள்ளனர். பலர் பணம் கொடுத்து மோட்டார் சைக்கிளை எடுத்துச் சென்றனர்.

ஆனால் மேட்டூர் பகுதியைச் சேர்ந்த செந்தில் என்பவர் சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இந்தப் புகாரை அடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை புகார் செய்தவரிடம் கொடுத்து அனுப்பினர், அதையடுத்து இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆலோசனைப்படி ஆய்வாளர் ரவீந்தரனிடம் செந்தில் ரூ 5 ஆயிரம் லஞ்சம் கொடுத்தார். லஞ்ச ஒழிப்பு போலீஸார் கொடுத்தனுப்பிய ரசாயனம் கலந்த ரூபாய் நோட்டுகளை ஆய்வாளர் வாங்கிய போது லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories