December 5, 2025, 5:15 PM
27.9 C
Chennai

டூவீலரை விடுவிக்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல்துறை ஆய்வாளர் கைது!

police ravindran horz - 2025

மேட்டூர் அருகே ரூ 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல்துறை ஆய்வாளர் மற்றும் தலைமை காவலர் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

மேட்டூர் காவல் உட்கோட்டத்தில் உள்ள கொளத்தூர் காவல் நிலைய பகுதியில் உள்ளது சின்ன தண்டா. இங்கு ஆடி 18 பண்டிகையின் போது சேவல் சண்டை நடத்தப்பட்டது. மேட்டூர் மட்டும் இல்லாமல் சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் சேவல்கள் கொண்டு வரப்பட்டு லட்சக் கணக்கில் பந்தயம் கட்டி சேவல் சண்டை நடத்தப்பட்டது.

இதனை நூற்றுக்கணக்கானோர் வேடிக்கை பார்த்தனர். இந்தத் தகவல் அறிந்த கொளத்தூர் போலீசார் திடீரென சேவல் சண்டை நடந்த பகுதிக்குச் சென்றனர். அப்போது வேடிக்கை பார்த்தவர்கள் தங்களது மோட்டார் சைக்கிள்களை விட்டு விட்டு ஓடினர். அதன் பிறகு பார்வையாளர்கள் விட்டுச் சென்ற மோட்டார் சைக்கிள்களை போலீசார் காவல் நிலையத்துக்கு எடுத்து வந்தனர்.

வழக்கு பதியாமல் வாகனத்தைக் கொடுக்க காவல் ஆய்வாளர் ரவீந்திரன் மற்றும் போலீசார் பணம் கேட்டு நிர்பந்தம் செய்துள்ளனர். பலர் பணம் கொடுத்து மோட்டார் சைக்கிளை எடுத்துச் சென்றனர்.

ஆனால் மேட்டூர் பகுதியைச் சேர்ந்த செந்தில் என்பவர் சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இந்தப் புகாரை அடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை புகார் செய்தவரிடம் கொடுத்து அனுப்பினர், அதையடுத்து இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆலோசனைப்படி ஆய்வாளர் ரவீந்தரனிடம் செந்தில் ரூ 5 ஆயிரம் லஞ்சம் கொடுத்தார். லஞ்ச ஒழிப்பு போலீஸார் கொடுத்தனுப்பிய ரசாயனம் கலந்த ரூபாய் நோட்டுகளை ஆய்வாளர் வாங்கிய போது லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories