அழகிரி ஆதங்கப் படுவதன் பின்னணி! திமுக., சொத்தை வட்டிக்கு விட்டு பணம் சம்பாதிப்பவர்கள் யார்?

IMG 20180813 120345 - 2026

திமுக., தலைவர் கருணாநிதி மறைந்த பின்னர், கட்சி ஸ்டாலின் தலைமையில் செயல்படும் என்று பெரும்பாலான திமுக.,வினர் சொல்லிக் கொண்டிருக்கும் போது, திடீரென்று நேற்று சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கருணாநிதியின் சமாதிக்கு வந்த முக அழகிரி வேறு ஒரு கருத்தைப் பதிவு செய்தார்.

கருணாநிதி சமாதிக்கு வந்த அழகிரி, செய்தியாளர்களை சந்தித்தபோது உண்மையான கலைஞரின் விசுவாசிகள் என்னோடு இருக்கிறார்கள் என்றார். தொடர்ந்து, நான்என் தந்தையிடம் என் ஆதங்கத்தை தெரிவித்துள்ளேன். விரைவில் நல்ல செய்தி கிடைக்கும் என்று கூறிவிட்டு அழகிரி புறப்பட்டார்.

06 Aug13 Alagiri - 2026

இதனிடையே போஸ்டர்களுக்குப் பெயர் பெற்ற மதுரை முழுதும் அழகிரியை ஆதரித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. தொடர்ந்து, தமிழகம் முழுவதும் அழகிரியின் ஆதரவாளர்களால் கலைஞர் திமுக., என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கப்படுவதாக போஸ்டர்களும் பதாகைகளும் களைகட்டின.

இந்நிலையில், அழகிரியிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர், தனிக் கட்சி தொடங்கும் எண்ணம் எல்லாம் இல்லை; ஒரு மாதம் காத்திருங்கள் நல்ல செய்தியை தெரிவிக்கிறேன். நீங்கள் நல்ல முடிவை எதிர்பார்க்கலாம் என்றார்.

ALSO READ:  தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

திமுகவில் அழகிரியை மீண்டும் சேர்க்கக் கூடாது என்று கூறப்படும் கருத்து குறித்துக் கேட்ட போது, என் பாதை தனிப்பாதை! அந்தப் பாதையில் நான் போய்க் கொண்டே இருப்பேன் என்றார். மேலும் தன்னை திமுகவில் இணைக்காததற்கு சில காரணங்கள் இருப்பதாகக் கூறி, அதிர்ச்சி ஏற்படுத்தினார்.

திமுக.,வில் அதிக அளவிலான தவறுகள் நடந்து வருகின்றன. அழகிரியை கட்சியில் சேர்த்தால் அந்த தவறுகளை சுட்டிக்காட்டி கேள்வி கேட்பான் என்பதால் என்னை மீண்டும் சேர்க்க தற்போது தலைமையில் உள்ளவர்கள் பயப்படுகிறார்கள் அதனால் என்னை கட்சியில் சேர்க்க அவர்கள் தயங்குகிறார்கள் என்றார்.

நான் வெளிப்படுத்திய ஆதங்கம், என் குடும்பம் பற்றியது அல்ல; அது கட்சி தொடர்பானது! திமுகவிற்கு எவ்வளவு சொத்துக்கள் இருக்கிறது என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அவை தவறாக பயன்படுத்தப்படுகிறது. திமுக நிதி வட்டிக்கு விடப்பட்டுள்ளது அந்த வட்டியில் இருந்து கிடைக்கும் லாபம் கட்சிக்கு வரவில்லை; அந்தப் பணம் எங்கே போகிறது என்று கட்சியில் இருப்பவர்களுக்கு நன்றாக தெரிந்தும் அதைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள்.

ALSO READ:  சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

வருகின்ற வரிப் பணத்திலிருந்து யார் யார் பயன் அடைகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். நான் திமுகவில் இருந்திருந்தால் இந்தத் தவறுகளைக் களைந்திருப்பேன். இதனால்தான் என்னை கட்சியிலிருந்து நீக்கினார்கள். மீண்டும் இணைக்க மறுக்கிறார்கள். ஆனாலும் கட்சி நிதி மற்றும் சொத்துகளை சீரமைக்க முயற்சிகள் எடுப்பேன் என்றார் அழகிரி.

கட்சியில் கணக்கு கேட்டதால்தான் திமுக.,விலிருந்து அதிமுக., என்ற கட்சி எம்.ஜி.ஆரால் உருவானது. இப்போது கட்சியில் இல்லாவிட்டாலும், அழகிரிக்கு திமுக.,வில் கணிசமான ஆதரவாளர்கள் உள்ளனர். அதை முந்தைய தேர்தல்கள் காட்டிக் கொடுத்துள்ளன. எனவே, திமுக., அது குறித்து நிச்சயம் யோசிக்கத்தான் செய்யும். மாறி வரும் சூழலில், திமுக., பலவீனப்படுவதும் பலமடைவதும் அழகிரியை வைத்தே உள்ளது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories