முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி, தமிழகம் கொண்டு வரப்பட்டது. தமிழகம் முழுவதும் கொண்டு செல்லப்பட்ட பின்னர் 6 இடங்களில் அஸ்தி கரைக்கப்பட்டது.
சென்னை பெசன்ட் நகரில், தமிழக பாஜக., தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் படகில் சென்று நடுக்கடலில் அஸ்தியை கரைத்தார்.

மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமிக்கும் இடத்தில் வாஜ்பாய் அஸ்தியை கரைத்தார்.
ராமேஸ்வரம், அக்னி தீர்த்தக் கடலில் தேசியச் செயலர் ஹெச்.ராஜா, பூஜைக்கு பின்னர் வாஜ்பாய் அஸ்தியை கரைத்தார்.

தன்னையும் கட்சியையும் தந்தையாய் தாயாய் வழிநடத்திய தலைவருக்கு தன் கையால் அஸ்தியை கரைத்து இறுதிச் சடங்கை இறுதி செய்தார் சிபி.ராதாகிருஷ்ணன்.
Related News Post: