காவி மோடிக்கு பாடம் புகட்ட தொண்டர்களுக்கு அழைப்பு! திமுக., தலைமைப் பீடத்தில் அமர்ந்ததும் ஸ்டாலின் கர்ஜனை!

stalin dmk leader - 2026

இன்று திமுக., தலைமைப் பீடத்தில் அமர்ந்துள்ளார் மு.க.ஸ்டாலின். திமுக., தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதும், மோடி அரசுக்கு பாடம் புகட்டவும், மாநில அரசைத் தூக்கி எறியவும் தொண்டர்கள் முன்வர வேண்டும் என்று தனது முதல் பேச்சை முத்தாய்ப்பாக முடித்தார் மு.க.ஸ்டாலின்.

இன்று திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் மூத்த நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கியதைத் தொடர்ந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்புரையாற்றினார். கலைஞர் போல பேசவோ, மொழியை ஆளவோ எனக்குத் தெரியாது என்றாலும், எதையும் முயன்று பார்கக் கூடிய துணிவு எனக்கு உண்டு.  திமுக தலைவர் ஆவேன் என கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை! நான் உள்ளிட்ட எந்த தனி நபரை விடவும் திமுகவும் அதன் சின்னமும், கொடியும்  பெரிது.

stalin dmk - 2026

கலைஞர் தந்த என் இதயம், எதையும் தாங்கும். திமுகவையும், தமிழகத்தையும் புதிய எதிர்காலத்தை நோக்கி அழைத்துச் செல்ல விரும்புகிறேன்.  மாற்றங்கள் நம்மிடம் இருந்து தொடங்க வேண்டும். இன்று புதிதாகப் பிறந்திருக்கிறேன்.

ALSO READ:  நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

நாட்டையே காவியாக மாற்ற துடித்துக் கொண்டிருக்கும் மோடி அரசுக்கு பாடம் புகட்டவும், மாநில அரசை தூக்கி எறியவும் தொண்டர்கள் முன்வர வேண்டும். தலைமைக்கு கட்டுப்பட்டவர்களாக தொண்டர்கள் இருக்க வேண்டும், தொண்டர்களின் எண்ணங்களை பிரதிபலிப்பதாக தலைமை இருக்கும்.

தந்தை பெரியார் கற்றுத் தந்த சுயமரியாதை, பெற்றுத் தந்த சமத்துவத்தில் இருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டோம் என பேசினார் மு.க.ஸ்டாலின்!

திமுக., பொதுக் குழுக் கூட்டம் முடிவடைந்தவுடன், நேராக அண்ணா சதுக்கம் சென்ற மு.க.ஸ்டாலின், அங்கே அண்ணா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, அண்ணா சதுக்கத்தில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடத்திலும் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

stalin dmk leader arati - 2026

பின் சென்னை வேப்பேரி பெரியார் திடலுக்குச் சென்ற மு.க.ஸ்டாலின், ஈ.வே.ரா., நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினார். வீட்டுக்கு வந்த அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளிக்கப் பட்டது குறிப்பிடத் தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories