விநாயகர் சதுர்த்திக்கு முட்டுக்கட்டை: தமிழக அரசாணையை ரத்து செய்யக் கோரி ஆளுநரிடம் மனு!

Published:

petition to governor for upcoming chathurthi festiv - 2026

விநாயகர் சதுர்த்தி விழாவை தடுக்கும் 25 நிபந்தனைகள் அடங்கிய தமிழக அரசாணையை ரத்து செய்ய கோரி தமிழக ஆளுநரை சந்தித்து இந்து முன்னணி மாநில தலைவர் காடேஷ்வரா சுப்பிரமணியன் தலைமையில் அந்த அமைப்பினர் புகார் மனு அளித்தனர்.

மேலும், தமிழக அரசாணையை ரத்து செய்ய வேண்டியும், விநாயகர் சதுர்த்தி விழா அமைதியான முறையில் நடத்திட வழிகாட்டும்படியும் கோரி மனு அளிக்கப் பட்டுள்ளது.

இதே போல், மத்திய உள்துறை அமைச்சரை இந்து முன்னணி மாநிலக்குழு சந்தித்து மனு அளித்தது.

தமிழகத்தில் இந்து முன்னணி நடத்தும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவதற்கு இடைஞ்சலாக திட்டமிட்டு போடப்பட்ட அரசாணை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து விளக்கி மனு அளிக்கப்பட்டது.

இந்து முன்னணி
மாநில அமைப்பாளர் பக்தவத்சலம், மாநில இணை அமைப்பாளர்கள் பொன்னையா, ராஜேஷ் , ஹிந்து ஜாக்ரண் மஞ்ச் அகில பாரத இணை ஒருங்கிணைப்பாளர் பிரேம்குமார் உள்ளிட்டோர் நேரில் சென்றனர்.

ALSO READ:  நடத்தையில் சந்தேகம்... நடந்த சண்டை... மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நீண்ட நேரம் தமிழகத்தில் நடைபெறுகின்ற முக்கிய விஷயங்கள் குறித்து உள்துறை அமைச்சர் விவரங்களைக் கேட்டறிந்தார்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img