உடற்பயிற்சி செய்து ஆச்சரியப் படுத்திய எடப்பாடி பழனிசாமி!

Published:

edappadi pazanisay - 2026

சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டினம் அருகே அனுப்பூரில்  ரூ.30 லட்சம் செலவில் அமைக்கப் பட்ட அம்மா பூங்கா மற்றும் அம்மா உடற்பயிற்சி கூடம் ஆகியவற்றை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

பூங்காவில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை பார்வையிட்ட அவர், உடற்பயிற்சி கூடத்தினுள் சென்று அங்கே வைக்கப்பட்டுள்ள உபகரணங்களை பார்வையிட்டார். பின்னர், இளைஞர்களிடம் உடற்பயிற்சி உபகரணங்கள் குறித்து கேட்டறிந்த அவர், தானும் சிறிது நேரம் உடற்பயிற்சியில் ஈடுபட்டார்.

இறகுப் பந்து மைதானத்தில் களம் இறங்கி, இறகுப் பந்து விளையாடினார். வெறுமனே திறந்து வைத்துவிட்டு சென்றுவிடாமல், உபகரணங்கள் உறுதியானவையாக உள்ளனவா, சரியாக வேலை செய்கின்றதா என்றெல்லாம் சோதித்துப் பார்த்து, இளைஞர்களுடன் உரையாடிவிட்டுச் சென்றது பலரது பாராட்டைப் பெற்றது.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img