கொல்லம்-செங்கோட்டை இருப்புப் பாதை சரியானது; இன்று முதல் ரயில்கள் இயக்கம்!

punalur sengottai train service - 2026

செங்கோட்டை: மண் சரிவு காரணமாக நிறுத்திவைக்கப் பட்டிருந்த ரயில்பாதை சீரமைப்புப் பணிகள் முடிந்து கேரளவுக்கு இன்று முதல் ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டது.

மேற்குத் தொடச்சி மலையின் அடிவாரப் பகுதியில் இருந்து மலையில் ஏறி மலைக்கு மறுபுறம் இருக்கும் கேரளாவுக்குச் செல்லும், இரு மாநில போக்குவரத்து ரயில் சேவையில் செங்கோட்டை -கொல்லம் பயணம் மிகவும் முக்கியமானதாகும்.

கொல்லம் செங்கோட்டை அகல ரயில் பாதையில் செங்கோட்டை புனலூர்
இடையேயான அகல ரயில் பாதை பணிகள் சுமார் 8 ஆண்டுகள் நடைபெற்று இந்தாண்டு துவக்கத்தில் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்ட பின் இந்த வழித் தடத்தில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்தத் தடத்தில் புளியரை முதல் தென்மலை வரையிலான பகுதி அடர்ந்த வனப் பகுதி! கடினமான பாறைகள் நிறைந்த பகுதி!  அண்மையில்தான் ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டு, தற்போது தினமும் பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் கொல்லம் – திருநெல்வேலி பயணிகள் ரயில் இந்தத் தடத்தில் இயக்கப்பட்டு வருகின்றன.

ALSO READ:  தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

கடந்த மாதம் கேரளத்தில் 50 ஆண்டுகளுக்கு இல்லாத அளவிற்கு தென்மேற்கு பருவமழை  கொட்டித் தீர்த்தது. இதனால், இந்த தடத்தில் கடந்த 15ஆம் தேதி நியூ ஆரியங்காவு, கழுதுருட்டி, எம்.எஸ்.எல்.தென்மலை உள்ளிட்ட 8 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. இதில் ஏராளமான பகுதிகளில் கடினமான பாறைகள் ரயில்தடத்தில் சரிந்து விழுந்தன.

குறிப்பாக தென்மலை குகை முன்பு மிகப் பெரிய பாறாங்கல் சரிந்து விழுந்தது. இதனைத் தொடர்ந்து தென்னக ரயில்வே அதிகாரிகள் குழு ஆய்வு மேற்கொண்டு தற்காலிகமாக ரயில் சேவையை நிறுத்தி வைத்தனர். இதனால் இரு மாநில வர்த்தக சேவை முற்றிலும் தடைபட்டது. இதனால் இரு மாநில வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.

தொடந்து இரவு பகலாக இந்தத் தடத்தில் மண்சரிவை சீரமைக்கும் பணிகளை ரயில்வே பணியாளர்கள் மேற்கொண்டனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தப் பணிகள் நிறைவு பெற்றன. இதைத் தொடர்ந்து கடந்த 26ஆம் தேதி செங்கோட்டை-புனலூர் தடத்தில் ரயில் எஞ்சினை இயக்கி ரயில்வே அதிகாரிகள் முதல் கட்ட சோதனைகளை நடத்தினர்.

ALSO READ:  மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

அதன் பின் இரண்டாம் கட்டமாக தென்னக ரயில்வே மதுரைக் கோட்ட பாதுகாப்பு அதிகாரி மனோகரன் தலைமையிலான குழு, இருப்பு பாதையில் ட்ராலி மூலம் ஆய்வு நடத்தி ஆய்வு அறிக்கை சமர்ப் பித்தது.

தொடந்து மக்களின் நலன் கருதி நேற்றிரவு சென்னை தாம்பரத்திலிருந்து கொல்லம் நோக்கி தாம்பரம் ரயில்சேவை துவங்கியது. அந்த ரயிலானது இன்று காலை 6 மணிக்கு செங்கோட்டை வந்தடைந்தது. அதன் பின் கொல்லதிற்கு 10.30க்கு சென்றடைந்தது. இதனால் கடந்த 16 நாட்களாக நிறுத்தப்பட்ட  ரயில்  சேவை துவங்கியது. இதை அடுத்து இரு மாநில வியாபாரிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories