சோபியா பின்புலத்தை விசாரிக்க வேண்டும்: தமிழிசை

tamilisai soundarrajan - 2026

சென்னை: சென்னையில் இருந்து தூத்துக்குடி சென்ற விமானத்தில் தமிழக பாஜக., தலைவர் தமிழிசையுடன்  பயணித்த பெண் சோபியா, திடீரென தரக்குறைவாக அவரை விமர்சித்ததால் பிரச்னை ஏற்பட்டது. தமிழிசையின் புகாரின் பேரில் சோபியா கைது செய்யப் பட்டார்.

இந்நிலையில் இந்த விவகாரத்தை அரசியல் பிரச்னையாக திமுக., கையில் எடுத்ததால், பெரிய அளவில் திமுக.,வினரால் டிவிட்டர் டிரெண்டிங் செய்யப் பட்டது. மேலும், நக்ஸல், தனித்தமிழ் பிரிவினைவாத இயக்கங்களும் சோபியாவுக்கு ஆதரவாக கருத்துகளைத் தெரிவித்ததால், இந்தப் பிரச்னை இன்று ஊடக விவாதம் ஆகியுள்ளது.

இந்நிலையில், இந்தப் பிரச்னையின் பின்னணியை இன்று செய்தியாளர்களிடம் விளக்கினார் தமிழிசை சௌந்தர்ராஜன். அப்போது அவர், விமான நிலையத்தில் சோபியா , என்னை பார்த்து முறைத்தார். அதுவும் விமானத்துக்குள்ளே கோஷம் போட்டார். சோபியாவின் பின்புலம் மீது எனக்கு சந்தேகம் உள்ளது. நான் விமான நிலைய விதிமுறைக்கு உட்பட்டே என்னுடைய புகாரை அளித்தேன் என்று தெளிவுபடுத்தினார். 

பேச்சுரிமைக்கு என்று ஒரு தளம், இடம் உள்ளது. மற்ற அரசியல் கட்சி தலைவர்களுக்கு எதிராக இது போன்று கோஷம் எழுப்பியிருந்தால் அவர்கள் இப்படிதான் நடந்துகொள்வார்களா?  என்று தமிழிசை கேள்வி எழுப்பினார்.

விமானத்திற்குள் என்னை நோக்கி பாஜகவை கடுமையாக விமர்சித்தார் மாணவி சோபியா . பாதுகாப்பு கருதி விமானத்தின் உள்ளே நான் எதுவும் பேசவில்லை என்று கூறிய தமிழிசை,  மாணவி சோபியாவின் பின்புலத்தில் ஏதாவதொரு அமைப்பு இருக்கலாம் என சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்தார்.  | |

ALSO READ:  அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

இதனிடையே, விமானங்களில் ஒழுக்கமில்லாத நடவடிக்கை தண்டனைக்குரிய குற்றம். தமிழக அரசியல்வாதிகளே! விமான பயணத்தின் போது, ஒரு கட்சி தலைவரை அதுவும் மரியாதைக்குரிய ஒரு பெண்மணியை முற்றுகையிட்டு, அவரை தகாத வார்த்தைகளால் பேசுவதை பாஜகவை சேர்ந்தவர் என்ற காரணத்தால் கண்டிக்காமல் குற்றம் புரிந்தவரை ஆதரிக்கும் நிலையை எடுப்பது உங்களின் தலையில் நீங்களே மண்ணை வாரி போட்டு கொள்ளும் முயற்சி. நாளை விமான பயணத்தில் உங்களையும் சிலர் அவமதிக்கக் கூடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஊடகவியலாளர்கள் இது நாள் வரை விமான பயணங்களில் ஏற்பட்ட பிரச்சனைகளை எப்படி கையாண்டீர்கள் என்பதை நினைத்து பார்க்கவும்… என்று எச்சரிக்கைக் குரல் எழுப்பியிருக்கிறார் பாஜக.,வை சேர்ந்த நாராயணன் திருப்பதி.

காரணம், பாஜக.,வை எதிர்த்து கருத்து தெரிவித்தார் என்ற காரணத்துக்கா, சூழலின் பின்னணி புரியாமல், திமுக., தலைவர் ஸ்டாலின் முதிர்ச்சியற்ற அரசியல் கருத்தை தெரிவித்திருக்கிறார். அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், சோபியாவுக்கு ஆதரவு கூறியதுடன், நானும் சொல்லுவேன் பாசிச பாஜக., ஆட்சி ஒழிக என்று என குரல் கொடுத்திருக்கிறார்.

ஸ்டாலினின் டிவிட்டர் பதிவால் சென்ற வாரம் வரை திமுக.,வுடன் ஒட்டுறவாடி வந்த தமிழிசை திடீர் அதிர்ச்சி அடைந்துள்ளார் அந்த அதிர்ச்சியை, தனது டிவிட்டர் பதிவில் வெளிப்படுத்தியுள்ளார். ஆனால், இப்போதும் கூட, ஸ்டாலின் கருத்து அதிர்ச்சி அளிக்கிறது என்றோ, திமுக.,வை விமர்சித்தோ அவர் கருத்து எதையும் பதிவிடவில்லை!

ALSO READ:  தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories