December 5, 2025, 2:02 PM
26.9 C
Chennai

சோபியா பின்புலத்தை விசாரிக்க வேண்டும்: தமிழிசை

tamilisai soundarrajan - 2025

சென்னை: சென்னையில் இருந்து தூத்துக்குடி சென்ற விமானத்தில் தமிழக பாஜக., தலைவர் தமிழிசையுடன்  பயணித்த பெண் சோபியா, திடீரென தரக்குறைவாக அவரை விமர்சித்ததால் பிரச்னை ஏற்பட்டது. தமிழிசையின் புகாரின் பேரில் சோபியா கைது செய்யப் பட்டார்.

இந்நிலையில் இந்த விவகாரத்தை அரசியல் பிரச்னையாக திமுக., கையில் எடுத்ததால், பெரிய அளவில் திமுக.,வினரால் டிவிட்டர் டிரெண்டிங் செய்யப் பட்டது. மேலும், நக்ஸல், தனித்தமிழ் பிரிவினைவாத இயக்கங்களும் சோபியாவுக்கு ஆதரவாக கருத்துகளைத் தெரிவித்ததால், இந்தப் பிரச்னை இன்று ஊடக விவாதம் ஆகியுள்ளது.

இந்நிலையில், இந்தப் பிரச்னையின் பின்னணியை இன்று செய்தியாளர்களிடம் விளக்கினார் தமிழிசை சௌந்தர்ராஜன். அப்போது அவர், விமான நிலையத்தில் சோபியா , என்னை பார்த்து முறைத்தார். அதுவும் விமானத்துக்குள்ளே கோஷம் போட்டார். சோபியாவின் பின்புலம் மீது எனக்கு சந்தேகம் உள்ளது. நான் விமான நிலைய விதிமுறைக்கு உட்பட்டே என்னுடைய புகாரை அளித்தேன் என்று தெளிவுபடுத்தினார். 

பேச்சுரிமைக்கு என்று ஒரு தளம், இடம் உள்ளது. மற்ற அரசியல் கட்சி தலைவர்களுக்கு எதிராக இது போன்று கோஷம் எழுப்பியிருந்தால் அவர்கள் இப்படிதான் நடந்துகொள்வார்களா?  என்று தமிழிசை கேள்வி எழுப்பினார்.

விமானத்திற்குள் என்னை நோக்கி பாஜகவை கடுமையாக விமர்சித்தார் மாணவி சோபியா . பாதுகாப்பு கருதி விமானத்தின் உள்ளே நான் எதுவும் பேசவில்லை என்று கூறிய தமிழிசை,  மாணவி சோபியாவின் பின்புலத்தில் ஏதாவதொரு அமைப்பு இருக்கலாம் என சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்தார்.  | |

இதனிடையே, விமானங்களில் ஒழுக்கமில்லாத நடவடிக்கை தண்டனைக்குரிய குற்றம். தமிழக அரசியல்வாதிகளே! விமான பயணத்தின் போது, ஒரு கட்சி தலைவரை அதுவும் மரியாதைக்குரிய ஒரு பெண்மணியை முற்றுகையிட்டு, அவரை தகாத வார்த்தைகளால் பேசுவதை பாஜகவை சேர்ந்தவர் என்ற காரணத்தால் கண்டிக்காமல் குற்றம் புரிந்தவரை ஆதரிக்கும் நிலையை எடுப்பது உங்களின் தலையில் நீங்களே மண்ணை வாரி போட்டு கொள்ளும் முயற்சி. நாளை விமான பயணத்தில் உங்களையும் சிலர் அவமதிக்கக் கூடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஊடகவியலாளர்கள் இது நாள் வரை விமான பயணங்களில் ஏற்பட்ட பிரச்சனைகளை எப்படி கையாண்டீர்கள் என்பதை நினைத்து பார்க்கவும்… என்று எச்சரிக்கைக் குரல் எழுப்பியிருக்கிறார் பாஜக.,வை சேர்ந்த நாராயணன் திருப்பதி.

காரணம், பாஜக.,வை எதிர்த்து கருத்து தெரிவித்தார் என்ற காரணத்துக்கா, சூழலின் பின்னணி புரியாமல், திமுக., தலைவர் ஸ்டாலின் முதிர்ச்சியற்ற அரசியல் கருத்தை தெரிவித்திருக்கிறார். அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், சோபியாவுக்கு ஆதரவு கூறியதுடன், நானும் சொல்லுவேன் பாசிச பாஜக., ஆட்சி ஒழிக என்று என குரல் கொடுத்திருக்கிறார்.

ஸ்டாலினின் டிவிட்டர் பதிவால் சென்ற வாரம் வரை திமுக.,வுடன் ஒட்டுறவாடி வந்த தமிழிசை திடீர் அதிர்ச்சி அடைந்துள்ளார் அந்த அதிர்ச்சியை, தனது டிவிட்டர் பதிவில் வெளிப்படுத்தியுள்ளார். ஆனால், இப்போதும் கூட, ஸ்டாலின் கருத்து அதிர்ச்சி அளிக்கிறது என்றோ, திமுக.,வை விமர்சித்தோ அவர் கருத்து எதையும் பதிவிடவில்லை!

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories