சோபியா பின்புலத்தை விசாரிக்க வேண்டும்: தமிழிசை

tamilisai soundarrajan - 2026

சென்னை: சென்னையில் இருந்து தூத்துக்குடி சென்ற விமானத்தில் தமிழக பாஜக., தலைவர் தமிழிசையுடன்  பயணித்த பெண் சோபியா, திடீரென தரக்குறைவாக அவரை விமர்சித்ததால் பிரச்னை ஏற்பட்டது. தமிழிசையின் புகாரின் பேரில் சோபியா கைது செய்யப் பட்டார்.

இந்நிலையில் இந்த விவகாரத்தை அரசியல் பிரச்னையாக திமுக., கையில் எடுத்ததால், பெரிய அளவில் திமுக.,வினரால் டிவிட்டர் டிரெண்டிங் செய்யப் பட்டது. மேலும், நக்ஸல், தனித்தமிழ் பிரிவினைவாத இயக்கங்களும் சோபியாவுக்கு ஆதரவாக கருத்துகளைத் தெரிவித்ததால், இந்தப் பிரச்னை இன்று ஊடக விவாதம் ஆகியுள்ளது.

இந்நிலையில், இந்தப் பிரச்னையின் பின்னணியை இன்று செய்தியாளர்களிடம் விளக்கினார் தமிழிசை சௌந்தர்ராஜன். அப்போது அவர், விமான நிலையத்தில் சோபியா , என்னை பார்த்து முறைத்தார். அதுவும் விமானத்துக்குள்ளே கோஷம் போட்டார். சோபியாவின் பின்புலம் மீது எனக்கு சந்தேகம் உள்ளது. நான் விமான நிலைய விதிமுறைக்கு உட்பட்டே என்னுடைய புகாரை அளித்தேன் என்று தெளிவுபடுத்தினார். 

பேச்சுரிமைக்கு என்று ஒரு தளம், இடம் உள்ளது. மற்ற அரசியல் கட்சி தலைவர்களுக்கு எதிராக இது போன்று கோஷம் எழுப்பியிருந்தால் அவர்கள் இப்படிதான் நடந்துகொள்வார்களா?  என்று தமிழிசை கேள்வி எழுப்பினார்.

விமானத்திற்குள் என்னை நோக்கி பாஜகவை கடுமையாக விமர்சித்தார் மாணவி சோபியா . பாதுகாப்பு கருதி விமானத்தின் உள்ளே நான் எதுவும் பேசவில்லை என்று கூறிய தமிழிசை,  மாணவி சோபியாவின் பின்புலத்தில் ஏதாவதொரு அமைப்பு இருக்கலாம் என சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்தார்.  | |

இதனிடையே, விமானங்களில் ஒழுக்கமில்லாத நடவடிக்கை தண்டனைக்குரிய குற்றம். தமிழக அரசியல்வாதிகளே! விமான பயணத்தின் போது, ஒரு கட்சி தலைவரை அதுவும் மரியாதைக்குரிய ஒரு பெண்மணியை முற்றுகையிட்டு, அவரை தகாத வார்த்தைகளால் பேசுவதை பாஜகவை சேர்ந்தவர் என்ற காரணத்தால் கண்டிக்காமல் குற்றம் புரிந்தவரை ஆதரிக்கும் நிலையை எடுப்பது உங்களின் தலையில் நீங்களே மண்ணை வாரி போட்டு கொள்ளும் முயற்சி. நாளை விமான பயணத்தில் உங்களையும் சிலர் அவமதிக்கக் கூடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஊடகவியலாளர்கள் இது நாள் வரை விமான பயணங்களில் ஏற்பட்ட பிரச்சனைகளை எப்படி கையாண்டீர்கள் என்பதை நினைத்து பார்க்கவும்… என்று எச்சரிக்கைக் குரல் எழுப்பியிருக்கிறார் பாஜக.,வை சேர்ந்த நாராயணன் திருப்பதி.

காரணம், பாஜக.,வை எதிர்த்து கருத்து தெரிவித்தார் என்ற காரணத்துக்கா, சூழலின் பின்னணி புரியாமல், திமுக., தலைவர் ஸ்டாலின் முதிர்ச்சியற்ற அரசியல் கருத்தை தெரிவித்திருக்கிறார். அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், சோபியாவுக்கு ஆதரவு கூறியதுடன், நானும் சொல்லுவேன் பாசிச பாஜக., ஆட்சி ஒழிக என்று என குரல் கொடுத்திருக்கிறார்.

ஸ்டாலினின் டிவிட்டர் பதிவால் சென்ற வாரம் வரை திமுக.,வுடன் ஒட்டுறவாடி வந்த தமிழிசை திடீர் அதிர்ச்சி அடைந்துள்ளார் அந்த அதிர்ச்சியை, தனது டிவிட்டர் பதிவில் வெளிப்படுத்தியுள்ளார். ஆனால், இப்போதும் கூட, ஸ்டாலின் கருத்து அதிர்ச்சி அளிக்கிறது என்றோ, திமுக.,வை விமர்சித்தோ அவர் கருத்து எதையும் பதிவிடவில்லை!

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories