காங்கிரஸ் விட்டுச் சென்ற ரூ.1.44 லட்சம் கோடி கடன் மோடி அரசுக்கு பெரும் சுமை!

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Published:

la ganesan - 2026
கோப்பு படம்

காங்கிரஸ் விட்டுச் சென்ற ரூ 1.44 லட்சம் கோடி கடன், அதற்கான வட்டி இரண்டுமே மோதி அரசுக்கு சுமையாகிப் போனது தான் பெட்ரோல் விலையைக் குறைக்க முடியாமல் போனதற்குக் காரணம்… என்று கூறியுள்ளார் பாஜக., மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான இல.கணேசன்.

அவர் இது குறித்து செய்தியாளர்களிடம் கூறியபோது, பெட்ரோல், டீசல் இரண்டையும் ஜி.எஸ்.டி வரயறைக்குள் கொண்டு வர அனைத்து மாநில அரசுகளும் ஒப்புக் கொள்ள வேண்டும். தமிழக அரசு இப்போதும் கூட எதிர்ப்பு தெரிவித்து வருகிறது…

மத்தியில், முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது, பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்துத் தருகிறேன் எனச் சொல்லி ஏராளமாகக் கடன் வைத்துவிட்டனர். அது, ரூ.1,44,000 கோடி கடன் என்ற அளவுக்குச் சென்று விட்டது.

உலகில் கச்சா எண்ணெயின் விலை குறைந்த போதிலும் கடன் பிரச்னையால் பாஜக., அரசால் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க முடியவில்லை.

ஜி.எஸ்.டி.க்குள் பெட்ரோல், டீசலைக் கொண்டு வர அனைத்து மாநில அரசுகளும் ஏற்க வேண்டும். நேற்றுகூட, தமிழக அரசு இதனை ஏற்க மாட்டோம் என அறிவித்துள்ளது என்று கூறினார் இல.கணேசன்.

ALSO READ:  நீர் தளும்பி அலைபாயும் அதிசயக் கிணறு; குஜராத்தில் பரபரப்பு!

Related articles

Recent articles

spot_img