December 5, 2025, 9:04 PM
26.6 C
Chennai

ஓபிஎஸ்., ஆதரவாளர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்திய எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா!

mgr centenary edappadi - 2025

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு நிறைவு விழா சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று மாலை நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்து கொண்டு பேசினார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அப்போது அவர், எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழாவை ஒட்டி, 5 ஆயிரத்திற்கும் அதிகமான திட்டங்கள் மக்களுக்காக செயல்படுத்தப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டார்.

மாலையில் விழா தொடங்கியதும், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா சிறப்பு மலர், மற்றும் தபால் தலை வெளியிடப்பட்டது.

விழாவில் இறுதியாக சிறப்புரை ஆற்றினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அப்போது அவர், எம்.ஜி.ஆர். என்ற மந்திர சொல்லின் துணையுடன் அதிமுக ஆட்சி தொடர்ந்து நீடிக்கும். இது ஆடம்பர விழா அல்ல! நலத்திட்டங்களை அறிவிக்கும் விழா.

சென்னைக்கு அருகே உலகத் தரம் வாய்ந்த புதிய பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும்.
மாம்பாக்கத்தில் துணை மின் நிலையம், அமைக்கப்படும். கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு எம்.ஜி.ஆரின் பெயர் சூட்டப்படும்.
விவசாயிகளுக்காக முதலமைச்சரின் வீட்டுக் காய்கறி உற்பத்தி திட்டம் தொடங்கப்படும் ..
பள்ளிக்கரணையில் ரூ.31 கோடியில் 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை கட்டப்படும்; போரூர் – பூவிருந்தவல்லி சாலைக்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்டப்படும் என்று கூறினார் எடப்பாடி பழனிசாமி.

விழாவில் உரையாற்றிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இலங்கை இனப் படுகொலையை அப்போதைய மத்திய அரசும், அதன் கூட்டணியில் இருந்த திமுகவும் தடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.

முன்னதாக, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவில் முதலமைச்சருடன், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தங்கமணி, வேலுமணி, செங்கோட்டையன் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பலரும் பங்கேற்றனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த திரளான தொண்டர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.

நந்தனம் ஒய்.எம்.சி. ஏ மைதானத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா மேடையில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி புகைப்படங்கள் மட்டுமே இருந்தன. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஒ.பன்னீர்செல்வம் புகைப்படம் இடம்பெறவில்லை. இது ஓ.பி.எஸ் ஆதரவாளர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories