சபரிமலையில் பெண்கள்… நேற்று தீர்ப்பு.. இன்று ஏற்பாடு ஜரூர்!

sabarimalai - 2026

திருவனந்தபுரம், சபரிமலைக்கு சுற்றுலா வரும் பெண்களுக்கு கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த 100 ஹெக்டர் நிலம் ஒதுக்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியதாக தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால், அங்கே பெண்கள் அனுமதிக்க வேண்டும் என்று கோரி, சபரிமலை வழிபாட்டுக்கு சம்பந்தமில்லாத, இஸ்லாமிய, மார்க்ஸிய சிந்தனையாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்வு, அனைத்து வயது பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் சென்று வழிபட அனுமதிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது. இந் நிலையில், தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார், இன்று கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து தீர்ப்பு குறித்தும் செயல்படுத்தப் படும் முறை குறித்தும் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பத்மகுமார், சபரிமலை அருகே நிலக்கல் பகுதியில் பெண்களுக்கு தேவையான கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர முடிவு செய்திருப்பதாகவும், அதற்காக, 100 ஹெக்டர் நிலம் ஒதுக்கப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியதாகவும் தகவல் கூறினார்.

மேலும், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்திருந்தாலும், சபரிமலைக்கு பெண்கள் பெருமளவில் வருவதற்கு வாய்ப்பில்லை என்றும், இந்தத் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தக்கல் செய்வது குறித்து முதல்வருடன் இன்று ஆலோசனை நடத்தவில்லை; அக்டோபர் 3ஆம் தேதி ஆலோசனை மேற்கொள்ளவுள்ளதாகவும் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories