சென்னையில் அமைகிறது இரண்டடுக்கு பஸ் ஸ்டாண்ட்! தமிழகத்தில் முதல் முயற்சி!

Published:

two story bus stand chennai - 2026

சென்னை: சென்னையில் முதல் முயற்சியாக இரண்டு அடுக்கு பஸ் ஸ்டாண்ட் அமைகிறது. சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தால், மாதவரம் ரவுண்டானா அருகில் 8 ஏக்கர் பரப்பளவில் இந்த பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டு வருகிறது.

இந்த இரட்டை அடுக்கு பஸ் ஸ்டாண்டில், தரை தளத்தில் 51 பேருந்துகளையும், மேல்தளத்தில் 50 பேருந்துகளையும் நிறுத்தி வைக்க முடியும்.

9 மாநகரப் பேருந்துகளுக்கு இந்த பேருந்து நிலையத்தில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், ஆந்திர மாநிலம், நெல்லூர், திருப்பதி, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்குச் செல்லும் பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன.

பயணிகள் தங்கும் இடம், தாய்மார்கள் பால் ஊட்டும் அறை, நடத்துனர் ஓட்டுநர் தங்கும் வசதி உள்ளிட்டவை இந்த இரண்டு அடுக்கு பேருந்து நிலையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்த பஸ் ஸ்டாண்ட் பயன்பாட்டுக்கு வரும் போது, கோயம்பேடு பஸ் நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும்.

தமிழகத்திலேயே முதல்முறையாக இரண்டு அடுக்கு பேருந்து நிலையமாக அமையும் இதனை வரும் 10ஆம் தேதி திறப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

ALSO READ:  கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img