ஆதரவு பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் கைது: தி.மு.க. ஸ்டாலின் அரசுக்கு கடும் எச்சரிக்கை!

 

stalin gopal - 2026

சென்னை: தங்களது ஆதரவுப் பத்திரிகையாளரான நக்கீரன் கோபால் கைது செய்யப் பட்டதற்கு திமுக., தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துக் கொண்டுள்ளதுடன், நக்கீரன் கோபாலை விடுவிக்காவிட்டால் விபரீதமான விளைவை சந்திக்க நேரிடும் என்று ஸ்டாலின் கடும் எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட கோபாலை, ஸ்டாலின் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நக்கீரன் கோபாலை விடுவிக்காவிட்டால் விபரீதமான விளைவை சந்திக்க நேரிடும் என எச்சரித்தார்.

ஆளுநரை சந்திக்க தங்களுக்கு இன்னும் நேரம் ஒதுக்கப்படவில்லை என கூறிய ஸ்டாலின், அவரை சந்திக்கும் போது கோபால் கைது பற்றி முறையிடுவோம் என்றார். மேலும், கோபால் மீது பாய்ந்த சட்டம் எச்.ராஜா மீது ஏன் பாயவில்லை என வினவினார். அறநிலையத் துறை ஊழியர்களின் குடும்பங்களை கொச்சைப்படுத்தி பேசியவர் எச்.ராஜா என்று கூறினார் ஸ்டாலின்.

முன்னதாக பல்கலைக் கழகங்களில் கோடி கோடியாகப் பணம் விளையாடுவது குறித்து கண்டறிந்து, அவற்றை ஒழிப்பதற்காகவும்,  பல்கலைக் கழகங்களில் முறைகேடுகள் நடக்காமல் தடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுத்ததற்காகவும், அவற்றால் பாதிக்கப் பட்ட அரசியல் கட்சியினர் ஆளுநருக்கு எதிராக அவதூறு பரப்பும் செயலில் இறங்கினர்.

அதன் ஒரு படியாக, ஆளுநர் ஆய்வை கொச்சைப் படுத்தி, தங்கள் ஊடகங்கள், டிவி., செய்திகள், பத்திரிகைகளில் ஆளுநரைக் குறித்த மோசமான இமேஜ் உருவாக்க மிகப் பெரிய அளவில் இறங்கினார்களாம். தொடர்ந்து, அருப்புக்கோட்டை நிர்மலாதேவி விவகாரத்தை உருவாக்கி, அதன் மூலம் ஆளுநரைப் பழி வாங்க ஒரு தரப்பு முயன்றதாகக் கூறப் படுகிறது.

இந்நிலையில், இவை எல்லாவற்றிற்கும் ஒரு படி மேலே போய், ஒரு பத்திரிகையாளராக பணி செய்து, ஊடகத்தை நடத்தி பின்னாளில் அரசியலுக்கு அந்து, இன்று ஆளுநராக உள்ள பத்திரிகையாளர் பன்வாரி லால் புரோஹித்தை, பெண் தொடர்பில் சிக்க வைத்து அசிங்கப் படுத்துவதற்காகவே தமிழகத்தின் ‘கிளு கிளு’ பத்திரிகையான நக்கீரனில் புலனாய்வு என்ற பெயரில் புனை கதைகளை அவிழ்த்து விட்டார்கள்.

பத்திரிகை சுதந்திரம் என்பதன் எல்லை மீறப் பட்டதாலும்,  பத்திரிகை சுதந்திரம் என்ற பெயரில் பக்கா அரசியல் செய்து வந்ததாலும், ஆளுநரின் பணிகளுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் விதத்தில் செயல் பட்டுக் கொண்டிருப்பதாலும், ஆளுநர் அளித்த புகாரின் பேரில் திமுக., பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் கைது செய்யப் பட்டுள்ளார். அதனால் அதிர்ச்சி அடைந்த திமுக., தலைவர் மு.க. ஸ்டாலின், தற்போது பொங்கி எழுந்து, பின் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்திருப்பது, தற்போது தங்களது கூட்டணியில் தோள் கொடுத்து வரும் மதிமுக., பொதுச் செயலர் வைகோ மூலமும், ஜால்ரா கட்சிகள் துணையுடனும் தமிழகத்தில் வன்முறைகளை ஏற்படுத்தி, சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயலுவதாகவே கருதப் படுகிறது.

இது தொடர்பில் ஸ்டாலின் வெளியிட்ட டிவிட்டர் பதிவுகள்…..

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories