ஆதரவு பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் கைது: தி.மு.க. ஸ்டாலின் அரசுக்கு கடும் எச்சரிக்கை!

 

stalin gopal - 2026

சென்னை: தங்களது ஆதரவுப் பத்திரிகையாளரான நக்கீரன் கோபால் கைது செய்யப் பட்டதற்கு திமுக., தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துக் கொண்டுள்ளதுடன், நக்கீரன் கோபாலை விடுவிக்காவிட்டால் விபரீதமான விளைவை சந்திக்க நேரிடும் என்று ஸ்டாலின் கடும் எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட கோபாலை, ஸ்டாலின் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நக்கீரன் கோபாலை விடுவிக்காவிட்டால் விபரீதமான விளைவை சந்திக்க நேரிடும் என எச்சரித்தார்.

ஆளுநரை சந்திக்க தங்களுக்கு இன்னும் நேரம் ஒதுக்கப்படவில்லை என கூறிய ஸ்டாலின், அவரை சந்திக்கும் போது கோபால் கைது பற்றி முறையிடுவோம் என்றார். மேலும், கோபால் மீது பாய்ந்த சட்டம் எச்.ராஜா மீது ஏன் பாயவில்லை என வினவினார். அறநிலையத் துறை ஊழியர்களின் குடும்பங்களை கொச்சைப்படுத்தி பேசியவர் எச்.ராஜா என்று கூறினார் ஸ்டாலின்.

முன்னதாக பல்கலைக் கழகங்களில் கோடி கோடியாகப் பணம் விளையாடுவது குறித்து கண்டறிந்து, அவற்றை ஒழிப்பதற்காகவும்,  பல்கலைக் கழகங்களில் முறைகேடுகள் நடக்காமல் தடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுத்ததற்காகவும், அவற்றால் பாதிக்கப் பட்ட அரசியல் கட்சியினர் ஆளுநருக்கு எதிராக அவதூறு பரப்பும் செயலில் இறங்கினர்.

அதன் ஒரு படியாக, ஆளுநர் ஆய்வை கொச்சைப் படுத்தி, தங்கள் ஊடகங்கள், டிவி., செய்திகள், பத்திரிகைகளில் ஆளுநரைக் குறித்த மோசமான இமேஜ் உருவாக்க மிகப் பெரிய அளவில் இறங்கினார்களாம். தொடர்ந்து, அருப்புக்கோட்டை நிர்மலாதேவி விவகாரத்தை உருவாக்கி, அதன் மூலம் ஆளுநரைப் பழி வாங்க ஒரு தரப்பு முயன்றதாகக் கூறப் படுகிறது.

இந்நிலையில், இவை எல்லாவற்றிற்கும் ஒரு படி மேலே போய், ஒரு பத்திரிகையாளராக பணி செய்து, ஊடகத்தை நடத்தி பின்னாளில் அரசியலுக்கு அந்து, இன்று ஆளுநராக உள்ள பத்திரிகையாளர் பன்வாரி லால் புரோஹித்தை, பெண் தொடர்பில் சிக்க வைத்து அசிங்கப் படுத்துவதற்காகவே தமிழகத்தின் ‘கிளு கிளு’ பத்திரிகையான நக்கீரனில் புலனாய்வு என்ற பெயரில் புனை கதைகளை அவிழ்த்து விட்டார்கள்.

பத்திரிகை சுதந்திரம் என்பதன் எல்லை மீறப் பட்டதாலும்,  பத்திரிகை சுதந்திரம் என்ற பெயரில் பக்கா அரசியல் செய்து வந்ததாலும், ஆளுநரின் பணிகளுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் விதத்தில் செயல் பட்டுக் கொண்டிருப்பதாலும், ஆளுநர் அளித்த புகாரின் பேரில் திமுக., பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் கைது செய்யப் பட்டுள்ளார். அதனால் அதிர்ச்சி அடைந்த திமுக., தலைவர் மு.க. ஸ்டாலின், தற்போது பொங்கி எழுந்து, பின் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்திருப்பது, தற்போது தங்களது கூட்டணியில் தோள் கொடுத்து வரும் மதிமுக., பொதுச் செயலர் வைகோ மூலமும், ஜால்ரா கட்சிகள் துணையுடனும் தமிழகத்தில் வன்முறைகளை ஏற்படுத்தி, சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயலுவதாகவே கருதப் படுகிறது.

இது தொடர்பில் ஸ்டாலின் வெளியிட்ட டிவிட்டர் பதிவுகள்…..

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories