ஆதரவு பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் கைது: தி.மு.க. ஸ்டாலின் அரசுக்கு கடும் எச்சரிக்கை!

 

stalin gopal - 2026

சென்னை: தங்களது ஆதரவுப் பத்திரிகையாளரான நக்கீரன் கோபால் கைது செய்யப் பட்டதற்கு திமுக., தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துக் கொண்டுள்ளதுடன், நக்கீரன் கோபாலை விடுவிக்காவிட்டால் விபரீதமான விளைவை சந்திக்க நேரிடும் என்று ஸ்டாலின் கடும் எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட கோபாலை, ஸ்டாலின் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நக்கீரன் கோபாலை விடுவிக்காவிட்டால் விபரீதமான விளைவை சந்திக்க நேரிடும் என எச்சரித்தார்.

ஆளுநரை சந்திக்க தங்களுக்கு இன்னும் நேரம் ஒதுக்கப்படவில்லை என கூறிய ஸ்டாலின், அவரை சந்திக்கும் போது கோபால் கைது பற்றி முறையிடுவோம் என்றார். மேலும், கோபால் மீது பாய்ந்த சட்டம் எச்.ராஜா மீது ஏன் பாயவில்லை என வினவினார். அறநிலையத் துறை ஊழியர்களின் குடும்பங்களை கொச்சைப்படுத்தி பேசியவர் எச்.ராஜா என்று கூறினார் ஸ்டாலின்.

முன்னதாக பல்கலைக் கழகங்களில் கோடி கோடியாகப் பணம் விளையாடுவது குறித்து கண்டறிந்து, அவற்றை ஒழிப்பதற்காகவும்,  பல்கலைக் கழகங்களில் முறைகேடுகள் நடக்காமல் தடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுத்ததற்காகவும், அவற்றால் பாதிக்கப் பட்ட அரசியல் கட்சியினர் ஆளுநருக்கு எதிராக அவதூறு பரப்பும் செயலில் இறங்கினர்.

அதன் ஒரு படியாக, ஆளுநர் ஆய்வை கொச்சைப் படுத்தி, தங்கள் ஊடகங்கள், டிவி., செய்திகள், பத்திரிகைகளில் ஆளுநரைக் குறித்த மோசமான இமேஜ் உருவாக்க மிகப் பெரிய அளவில் இறங்கினார்களாம். தொடர்ந்து, அருப்புக்கோட்டை நிர்மலாதேவி விவகாரத்தை உருவாக்கி, அதன் மூலம் ஆளுநரைப் பழி வாங்க ஒரு தரப்பு முயன்றதாகக் கூறப் படுகிறது.

இந்நிலையில், இவை எல்லாவற்றிற்கும் ஒரு படி மேலே போய், ஒரு பத்திரிகையாளராக பணி செய்து, ஊடகத்தை நடத்தி பின்னாளில் அரசியலுக்கு அந்து, இன்று ஆளுநராக உள்ள பத்திரிகையாளர் பன்வாரி லால் புரோஹித்தை, பெண் தொடர்பில் சிக்க வைத்து அசிங்கப் படுத்துவதற்காகவே தமிழகத்தின் ‘கிளு கிளு’ பத்திரிகையான நக்கீரனில் புலனாய்வு என்ற பெயரில் புனை கதைகளை அவிழ்த்து விட்டார்கள்.

பத்திரிகை சுதந்திரம் என்பதன் எல்லை மீறப் பட்டதாலும்,  பத்திரிகை சுதந்திரம் என்ற பெயரில் பக்கா அரசியல் செய்து வந்ததாலும், ஆளுநரின் பணிகளுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் விதத்தில் செயல் பட்டுக் கொண்டிருப்பதாலும், ஆளுநர் அளித்த புகாரின் பேரில் திமுக., பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் கைது செய்யப் பட்டுள்ளார். அதனால் அதிர்ச்சி அடைந்த திமுக., தலைவர் மு.க. ஸ்டாலின், தற்போது பொங்கி எழுந்து, பின் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்திருப்பது, தற்போது தங்களது கூட்டணியில் தோள் கொடுத்து வரும் மதிமுக., பொதுச் செயலர் வைகோ மூலமும், ஜால்ரா கட்சிகள் துணையுடனும் தமிழகத்தில் வன்முறைகளை ஏற்படுத்தி, சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயலுவதாகவே கருதப் படுகிறது.

இது தொடர்பில் ஸ்டாலின் வெளியிட்ட டிவிட்டர் பதிவுகள்…..

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories