நீதிமன்ற அவமரியாதைச் சொற்கள்..?: உணர்ச்சிவசப் பட்டுப் பேசியதாக மன்னிப்பு கோரினார் ஹெச்.ராஜா!

Published:

h raja e1537109254447 - 2026

சென்னை: நீதிமன்றத்தை ஹெச்.ராஜா அவமதித்ததாகக் கூறி அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில், பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி மன்னிப்பு கோரினார்.

கடந்த மாதம் புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போதான பொதுக்கூட்டம் தொடர்பாக, போலீசாருடன் நடந்த வாக்குவாதத்தில் ஹெச்.,ராஜா நீதிமன்றத்தை அவமரியாதை செய்யும் வகையிலான சொற்களைப் பேசியதாக வீடியோ ஒன்று வைரலாகப் பரவியது.

இதை அடுத்து, போலீஸார் மற்றும் நீதிமன்றத்தை ஹெச்.ராஜா இழிவுபடுத்தினார் என்று கூறி கொடுக்கப் பட்ட புகார்களின் அடிப்படையில் வழக்குகள் பதிவு செய்யப் பட்டனர். இது தொடர்பான வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்தது. இந்த வழக்கில் ஹெச்.ராஜா இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

அப்போது ஹெச்.ராஜா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில். தாம் உணர்ச்சிவசப்பட்டு வாய் தவறிப் பேசி விட்டதாகவும், நீதிமன்றத்தை அவமதிக்கும் நோக்கம் தமக்கு இல்லை என்றும், இதனால் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ALSO READ:  பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

இந்த விளக்கத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் ஹெச்.ராஜா மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கை முடித்து வைப்பதாக அறிவித்தனர்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img