ஆண்டாள் தாயாரை இழிவுபடுத்திய வைரமுத்து இனி நிம்மதியாக தூங்கக் கூடாது…

Published:

bjp ladies yatra - 2026

தாயார் ஆண்டாளை இழிவுபடுத்திப் பேசிய கவிஞர் வைரமுத்து, வாழ்நாள் முழுவதும் நிம்மதியாக துாங்கக்கூடாது என பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா பேசினார்.

சபரிமலையின் புனிதம் காக்கக் கோரி மதுரையில் நேற்று நடந்த பாஜக., மகளிர் அணி யாத்திரையைத் துவக்கி வைத்துப் பேசினார் ஹெச்.ராஜா.

அப்போது அவர் பேசியதாவது… இந்துக் கோவில்களை சான்றோர், ஆன்றோர் கொண்ட வாரியத்திடம் அரசு ஒப்படைக்க வேண்டும். திராவிட இயக்கங்களால் இந்துக் கோவில்களில் நடக்கும் கொள்ளையை நிறுத்தாமல் ஓய மாட்டேன்.

கடந்த 1950ல் சபரிமலை நடையைத் திறக்க மேல்சாந்தி சென்றபோது, உள்ளே விக்ரகங்கள் தீயில் எரிந்து கிடந்தன. அன்றிலிருந்து இன்று வரை சபரிமலையை அபகரிக்க சதி நடக்கிறது. அங்குள்ள கம்யூனிஸ்ட் கட்சியினர் கூட10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட எங்கள் பெண்கள் யாரும் சபரிமலைக்கு செல்ல மாட்டார்கள் என்கின்றனர். ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி பெற்றது போல கேரள அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்தால் மத்திய அரசு ஆதரிக்கும்.

ALSO READ:  முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

எல்லா சமுதாய சீர்கேடுகளுக்கும், திராவிட இயக்கங்கள்தான் காரணம். தாயார் ஆண்டாளை இழிவுபடுத்திப் பேசிய வைரமுத்து, வாழ்நாள் முழுவதும் நிம்மதியாக இனி தூங்கக் கூடாது. இமேஜ் குறித்து கவலைப்படாமல் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை வெளியில் கூற முன்வந்தது வரவேற்கத் தக்கது. இதற்காக பெண்களை கொச்சைப்படுத்தக் கூடாது. இதனால் அவர்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகள் எதிர்காலத்தில் குறையும் என்று பேசினார்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img