மனைவியை கரெக்ட் பண்ணி.. கூட்டிச் சென்றதால் ஆத்திரம்: கள்ளக்காதலனின் தந்தையைக் கொன்றவர் சரண்!

judgement - 2026

கள்ளக்காதலனுடன் தனது மனைவி ஓடிவிட்டதால் ஆத்திரமடைந்த ஒருவர், தன் மனைவியின் கள்ளக்காதலனுடைய  தந்தையை விசாரிக்க அழைத்துப் போய், ஆத்திரத்தில் அடித்துக் கொலை செய்தார். பின் அவர் தனது நண்பருடன் நேற்று நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

சென்னை, குன்றத்தூர் அடுத்த திருமுடிவாக்கம் பகுதியில் கடந்த 21ஆம் தேதி 45 வயது மதிக்கத் தக்க அடையாளம் தெரியாத அழுகிய ஆண் சடலத்தை குன்றத்தூர் போலீசார் மீட்டனர்

இந்நிலையில் இஸ்மாயில் என்பவரைக் கொலை செய்து திருமுடிவாக்கம் பகுதியில் வீசியதாகக் கூறி சுரேந்தர் (32 வயது) பாலாஜி (30 வயது) ஆகியோர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நேற்று சரண் அடைந்தனர்

இதையடுத்து  சடலமாக மீட்கப்பட்டவர் இஸ்மாயில் என்பது உறுதிப் படுத்தப் பட்டது. போலீசார் இதுகுறித்து கூறிய போது, சென்னை வண்டலூர் அருகே மணிமங்கலத்தைச் சேர்ந்தவர் இஸ்மாயில் (45 வயது). அவரது மகன் அசாருதீன் (24 வயது). இருவரும் ஆட்டோ ஓட்டுனர்கள்

ALSO READ:  திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை - வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது...

சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியில் வசிக்கும் சுரேந்தர் என்பவரின் மனைவி சுமதி (30 வயது) அசாருதீனின் ஆட்டோவில் அடிக்கடி சென்று வந்தார். இதனால் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு தகாத உறவாக மாறியுள்ளது.

சில மாதங்களுக்கு முன் கணவர், குழந்தைகளை விட்டுவிட்டு சுமதி, அசாருதீனுடன் சென்றுவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த சுரேந்தரும் அவரது நண்பர் பாலாஜி என்பவரும் இஸ்மாயிலை மணிமங்கலம் அழைத்துச் சென்று தலைமறைவான இருவர் குறித்தும் விசாரித்துள்ளனர்

ஆனால், அவரோ தனக்கு எதுவும் தெரியாது என்று கூறி அடம் பிடித்ததால் கோபம் அடைந்த இருவரும் இஸ்மாயிலை கட்டையால் சரமாரியாக அடித்துள்ளனர். இதனால், இஸ்மாயில் சுருண்டு விழுந்து இறந்துள்ளார்.. என்று கூறினர்.

கள்ளக்காதல் தவறில்லை என்றும், கள்ளக்காதல் விவகாரத்தில் தண்டனை இல்லை என்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு உறுதிப் படுத்தி விட்டதால், இப்போது குடும்பங்கள் பல சிதைந்து வருகின்றன. மனைவி கொலையாவது அல்லது கணவன் தீர்த்துக் கட்டப் படுவது, இதன் மூலம் தம்பதியரில் அடுத்தவர் சிறைக்குச் செல்வது என்று குற்றங்கள் பெருகிவிட்டதால், அவர்களின் குழந்தைகள் நடுத்தெருவில் ஆதரவற்ற நிலையில் தவிக்க விடப் படுகின்றனர். இதற்கு உச்ச நீதிமன்றமே காரணமாகிவிட்டதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ALSO READ:  பிரசாரத்தில் இருந்த திமுக., வேட்பாளர்; வீட்டில் 122 பவுன் நகை கொள்ளை!

1 COMMENT

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories