மனைவியை கரெக்ட் பண்ணி.. கூட்டிச் சென்றதால் ஆத்திரம்: கள்ளக்காதலனின் தந்தையைக் கொன்றவர் சரண்!

judgement - 2026

கள்ளக்காதலனுடன் தனது மனைவி ஓடிவிட்டதால் ஆத்திரமடைந்த ஒருவர், தன் மனைவியின் கள்ளக்காதலனுடைய  தந்தையை விசாரிக்க அழைத்துப் போய், ஆத்திரத்தில் அடித்துக் கொலை செய்தார். பின் அவர் தனது நண்பருடன் நேற்று நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

சென்னை, குன்றத்தூர் அடுத்த திருமுடிவாக்கம் பகுதியில் கடந்த 21ஆம் தேதி 45 வயது மதிக்கத் தக்க அடையாளம் தெரியாத அழுகிய ஆண் சடலத்தை குன்றத்தூர் போலீசார் மீட்டனர்

இந்நிலையில் இஸ்மாயில் என்பவரைக் கொலை செய்து திருமுடிவாக்கம் பகுதியில் வீசியதாகக் கூறி சுரேந்தர் (32 வயது) பாலாஜி (30 வயது) ஆகியோர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நேற்று சரண் அடைந்தனர்

இதையடுத்து  சடலமாக மீட்கப்பட்டவர் இஸ்மாயில் என்பது உறுதிப் படுத்தப் பட்டது. போலீசார் இதுகுறித்து கூறிய போது, சென்னை வண்டலூர் அருகே மணிமங்கலத்தைச் சேர்ந்தவர் இஸ்மாயில் (45 வயது). அவரது மகன் அசாருதீன் (24 வயது). இருவரும் ஆட்டோ ஓட்டுனர்கள்

சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியில் வசிக்கும் சுரேந்தர் என்பவரின் மனைவி சுமதி (30 வயது) அசாருதீனின் ஆட்டோவில் அடிக்கடி சென்று வந்தார். இதனால் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு தகாத உறவாக மாறியுள்ளது.

சில மாதங்களுக்கு முன் கணவர், குழந்தைகளை விட்டுவிட்டு சுமதி, அசாருதீனுடன் சென்றுவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த சுரேந்தரும் அவரது நண்பர் பாலாஜி என்பவரும் இஸ்மாயிலை மணிமங்கலம் அழைத்துச் சென்று தலைமறைவான இருவர் குறித்தும் விசாரித்துள்ளனர்

ஆனால், அவரோ தனக்கு எதுவும் தெரியாது என்று கூறி அடம் பிடித்ததால் கோபம் அடைந்த இருவரும் இஸ்மாயிலை கட்டையால் சரமாரியாக அடித்துள்ளனர். இதனால், இஸ்மாயில் சுருண்டு விழுந்து இறந்துள்ளார்.. என்று கூறினர்.

கள்ளக்காதல் தவறில்லை என்றும், கள்ளக்காதல் விவகாரத்தில் தண்டனை இல்லை என்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு உறுதிப் படுத்தி விட்டதால், இப்போது குடும்பங்கள் பல சிதைந்து வருகின்றன. மனைவி கொலையாவது அல்லது கணவன் தீர்த்துக் கட்டப் படுவது, இதன் மூலம் தம்பதியரில் அடுத்தவர் சிறைக்குச் செல்வது என்று குற்றங்கள் பெருகிவிட்டதால், அவர்களின் குழந்தைகள் நடுத்தெருவில் ஆதரவற்ற நிலையில் தவிக்க விடப் படுகின்றனர். இதற்கு உச்ச நீதிமன்றமே காரணமாகிவிட்டதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

1 COMMENT

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories