December 6, 2025, 2:40 AM
26 C
Chennai

மனைவியை கரெக்ட் பண்ணி.. கூட்டிச் சென்றதால் ஆத்திரம்: கள்ளக்காதலனின் தந்தையைக் கொன்றவர் சரண்!

judgement - 2025

கள்ளக்காதலனுடன் தனது மனைவி ஓடிவிட்டதால் ஆத்திரமடைந்த ஒருவர், தன் மனைவியின் கள்ளக்காதலனுடைய  தந்தையை விசாரிக்க அழைத்துப் போய், ஆத்திரத்தில் அடித்துக் கொலை செய்தார். பின் அவர் தனது நண்பருடன் நேற்று நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

சென்னை, குன்றத்தூர் அடுத்த திருமுடிவாக்கம் பகுதியில் கடந்த 21ஆம் தேதி 45 வயது மதிக்கத் தக்க அடையாளம் தெரியாத அழுகிய ஆண் சடலத்தை குன்றத்தூர் போலீசார் மீட்டனர்

இந்நிலையில் இஸ்மாயில் என்பவரைக் கொலை செய்து திருமுடிவாக்கம் பகுதியில் வீசியதாகக் கூறி சுரேந்தர் (32 வயது) பாலாஜி (30 வயது) ஆகியோர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நேற்று சரண் அடைந்தனர்

இதையடுத்து  சடலமாக மீட்கப்பட்டவர் இஸ்மாயில் என்பது உறுதிப் படுத்தப் பட்டது. போலீசார் இதுகுறித்து கூறிய போது, சென்னை வண்டலூர் அருகே மணிமங்கலத்தைச் சேர்ந்தவர் இஸ்மாயில் (45 வயது). அவரது மகன் அசாருதீன் (24 வயது). இருவரும் ஆட்டோ ஓட்டுனர்கள்

சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியில் வசிக்கும் சுரேந்தர் என்பவரின் மனைவி சுமதி (30 வயது) அசாருதீனின் ஆட்டோவில் அடிக்கடி சென்று வந்தார். இதனால் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு தகாத உறவாக மாறியுள்ளது.

சில மாதங்களுக்கு முன் கணவர், குழந்தைகளை விட்டுவிட்டு சுமதி, அசாருதீனுடன் சென்றுவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த சுரேந்தரும் அவரது நண்பர் பாலாஜி என்பவரும் இஸ்மாயிலை மணிமங்கலம் அழைத்துச் சென்று தலைமறைவான இருவர் குறித்தும் விசாரித்துள்ளனர்

ஆனால், அவரோ தனக்கு எதுவும் தெரியாது என்று கூறி அடம் பிடித்ததால் கோபம் அடைந்த இருவரும் இஸ்மாயிலை கட்டையால் சரமாரியாக அடித்துள்ளனர். இதனால், இஸ்மாயில் சுருண்டு விழுந்து இறந்துள்ளார்.. என்று கூறினர்.

கள்ளக்காதல் தவறில்லை என்றும், கள்ளக்காதல் விவகாரத்தில் தண்டனை இல்லை என்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு உறுதிப் படுத்தி விட்டதால், இப்போது குடும்பங்கள் பல சிதைந்து வருகின்றன. மனைவி கொலையாவது அல்லது கணவன் தீர்த்துக் கட்டப் படுவது, இதன் மூலம் தம்பதியரில் அடுத்தவர் சிறைக்குச் செல்வது என்று குற்றங்கள் பெருகிவிட்டதால், அவர்களின் குழந்தைகள் நடுத்தெருவில் ஆதரவற்ற நிலையில் தவிக்க விடப் படுகின்றனர். இதற்கு உச்ச நீதிமன்றமே காரணமாகிவிட்டதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

1 COMMENT

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories