வழிப்பறி ! மிரட்டல் ! பலான தொழில் ! போலீஸ்காரரே ஈடுபட்டதால் அதிர்ச்சி !

arrested - 2026

இரண்டு ஆண்டுகளாக பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்த தலைமைக் காவலர் ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது போலீஸ் வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அமைந்தகரை என்எஸ்கே நகரைச் சேர்ந்தவர் ஜெயந்தி (30 வயது). இரு தினங்களுக்கு முன் அதிகாலை 3 மணிக்கு மர்ம நபர் ஒருவர் வீட்டிற்குள் புகுந்து பணப் பையை பறித்துக்கொண்டு தப்பி ஓட முயன்றதாகவும், அவனைப் பிடித்து வைத்துள்ளதாகவும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துள்ளார். இதை அடுத்து, அங்கே விரைந்து வந்த அமைந்தகரை போலீசார் மர்ம நபரை பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரியவந்தன. இதுகுறித்து போலீசார்  கூறியபோது, சென்னை கோயம்பேடு தலைமை காவலர் பார்த்திபன், ஜெயந்தி என்ற பெண்ணை வைத்து இரண்டு ஆண்டுகளாக பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். சம்பவத்தன்று இருவரும் சேர்ந்து விஸ்வநாதன் என்பவரிடம் இருந்து பணத்தைப் பறிக்க முயன்றுள்ளனர்.

விசாரணையில் அவர்கள், ஆண்களை மிரட்டி அவர்களிடமிருந்து நகை மற்றும் பணத்தை பறித்து வந்தது தெரியவந்தது. பாலியல் தொழில் மூலம் வருமானம் அதிகரித்ததால், ஜெயந்திக்கு இரண்டு படுக்கை அறைகள் கொண்ட வீட்டை வாடகைக்கு எடுத்துக் கொடுத்து அதில் தொழில் நடத்தி வந்ததும் தெரியவந்தது

இதை அடுத்து இருவர் மீதும் அமைந்தகரை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக, போலீசார் தெரிவித்தனர்

இந்நிலையில் காவலர் பார்த்திபனை நேற்றிரவு உயர் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்தனர். அவர் மீது கைது நடவடிக்கை எடுக்கப் படலாம் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories