பதவி நீட்டிப்புக் காலத்தில் ஊதியம் பெறாமல் பணியாற்றவும் தயார்: பொன்.மாணிக்கவேல்

pon manickavel - 2026

சென்னை: இன்று ரயில்வே ஐ.ஜி.,யாக இருந்து ஓய்வு பெறும் பொன்.மாணிக்கவேல் கூடுதல் பொறுப்பாக சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவையும் கவனித்து வந்தார். சிலைக்கடத்தல் தடுப்பு வழக்குகள் விசாரணை இன்னும் இருப்பதால், அவரது பதவிக் காலத்தை மேலும் ஓர் ஆண்டுக்கு நீட்டித்து உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்தப் பதவி நீட்டிப்புக் காலத்தில், ஊதியம் பெறாமலும் தாம் பணியாற்றாத் தயார் என்று கூறினார் பொன்.மாணிக்கவேல்.

முன்னதாக, சிலைக் கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றி பிறப்பித்த அரசாணையை ரத்து செய்த உயர் நீதிமன்றம் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு தலைவர் மற்றும் சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேலுக்கு மேலும் ஓர் ஆண்டு காலத்திற்கு பணி நீடிப்பு வழங்கி தீர்ப்பளித்தது.

சிலைக் கடத்தல் தடுப்பு வழக்குகளை நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் விசாரித்து வந்த நிலையில், நீதிமன்றத்தில் சாட்சி விசாரணை தொடங்கிய வழக்குகளைத் தவிர, நிலுவையில் உள்ள மற்ற அனைத்து வழக்குகளையும் சிபிஐ விசாரணைக்கு மாற்றி, கடந்த ஆகஸ்ட்1ஆம் தேதி, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.

இந்த அரசாணையை எதிர்த்து, வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், டிராபிக் ராமசாமி ஆகியோர், உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கு, சிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில், கடந்த ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, சிலைக் கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றி தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணைக்கு இடைக்காலத் தடை விதிக்கப் பட்டது.

தொடர்ந்து இந்த வழக்கு இறுதி விசாரணைக்கு வந்தபோது, தங்களிடம் ஆள் பற்றாக்குறை இருப்பதால், சிலைக் கடத்தல் வழக்குகளை தங்களால் விசாரிக்க இயலவில்லை என்றும், தற்போது விசாரித்துவரும் ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் குழுவுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கத் தயாராக இருப்பதாகவும் சிபிஐ தெரிவித்தது..

இந்நிலையில், இன்று இறுதிக்கட்ட வாதங்கள் முடிந்து தீர்ப்பு அளிக்கப் பட்டது. அதில், தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணையில் அது பிறப்பிக்கப்பட வேண்டியதற்கான காரணங்கள் தெளிவாக இல்லை! கொள்கை முடிவு ஏற்றுக் கொள்ளும்படி இல்லை. எனவே, சட்டவிதிகளுக்கு உட்பட்டு இல்லாததால், சிலைக் கடத்தல் வழக்கு விசாரணையை சிபிஐ.,க்கு மாற்றும் தமிழ்நாடு அரசின் அரசாணை ரத்து செய்யப் படுவதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், விசாரணை நீள்வதால், ஐ.ஜி பொன்.மாணிக்கவேலின் பதவிக் காலத்தை மேலும் ஓர் ஆண்டு நீட்டிப்பதாகவும், அவருக்கு தற்போது தமிழ்நாடு அரசு அளித்த அனைத்து வசதிகளையும் தொடர்ந்து வழங்க வேண்டும்! அதற்கான உரிய உத்தரவை டிஜிபியும், தமிழ்நாடு அரசும் பிறப்பிக்க வேண்டும்; மத்திய அரசும், சிபிஐ.,யும் தெரிவித்துள்ளதுபோல் சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தொடர்ந்து, ஐ.ஜி பொன்.மாணிக்கவேலின் பணிநீட்டிப்பு உடனடியாக அமலுக்கு வருவதாகவும், சிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகளின் நிலை பற்றிய விவரங்கள், விசாரணை விவரங்கள் அடங்கிய அறிக்கைகளை, ஐ.ஜி பொன்.மாணிக்கவேல், தமிழ்நாடு அரசுக்கு அளிக்கத் தேவையில்லை; சீலிடப்பட்ட கவரில் வைத்து நீதிமன்றத்தில் மட்டும் தாக்கல் செய்தால் போதும் என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

இந்தத் தீர்ப்புக்குப் பின் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.மாணிக்கவேல், யாருக்கும் எள்ளளவும் சிறுமை ஏற்படுத்தாமல், எவ்வித காலமும் தாழ்த்தாமல், சிலைக்கடத்தல் வழக்குகளை விசாரித்து முடிக்க உள்ளதாகவும், பதவி நீட்டிப்பு காலத்தில், ஊதியம் பெறாமல் கூட பணியாற்றத் தயாராக இருப்பதாகவும் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories