துரை முருகன் தொடங்கி வைத்தது! வைகோ… வன்னியரசு… திருமாவளவன் மோதலில் நிற்கிறது!

11 July30 Vaiko - 2026

விடுதலைச் சிறுத்தைகளும் மதிமுக.,வும் கூட்டணிக் கட்சிகள் இல்லை, தோழமைக் கட்சிகள்தான் என்று திமுக., பொருளாளர் துரை முருகன் சொன்னாலும் சொன்னார்… இப்போது விடுதலைச் சிறுத்தைகளுக்கும் மதிமுக.,வுக்கும் பிரச்னை வேறு வகையில் திரும்பியிருக்கிறது!

தலித்தியம் திராவிடியம் என்று இரு வேறு திசைகளில் இருந்து ஒருவருக்கு ஒருவர் தாக்குதல்களைத் தொடுத்துக் கொண்டிருக்கின்றனர். திராவிட இயக்கங்களால் தலித்துகள் முன்னேறவில்லை இடை நிலை சாதிகளே பயன் பெற்றன என்ற ரீதியில் கருத்துகளைப் பதிவிட்டார் வன்னியரசு. இதை அடுத்து, வைகோ பகிரங்கமாக சில கருத்துகளை வன்னியரசு மற்றும் திருமாவளவனை முன்வைத்து தெரிவித்தார்.

விருதுநகர் கூட்டத்தில் அவர் பேசிய பேச்சுகள் இப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. வன்னியரசுவுக்கு பதில் சொன்ன வைகோ, தான் ஒரு தீக்குச்சி, உரசாதீர்கள் என்றார். மேலும், விடுதலைச் சிறுத்தைகளின் தேர்தல் செலவுக்காக முன்னர் தாம் ரூ.30 லட்சம் பணம் கொடுத்ததாகவும் ஒரு தகவலைக் கூறினார்.

இந்நிலையில், வைகோவின் கோபம் என்மீதா, இல்லை வன்னிஅரசு மீதா? என்று எதிர்ப்பை நேரடியாக பதிவுசெய்வதை தவிர நான் யாரையும் தூண்டிவிடுவதில்லை என்று திருமாவளவன் அதற்கு பதிலளித்திருக்கிறார்.

ALSO READ:  தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

வைகோ பற்றி வன்னிஅரசு பதிவு செய்த கருத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கருத்தல்ல என்று கூறியுள்ள திருமாவளவன், வன்னியரசு சர்ச்சைக்குள்ளான பதிவை நீக்கிவிட்டார், தனது வருத்தத்தையும் பதிவு செய்துவிட்டார் என்று கூறியுள்ளார்.

முன்னர் திராவிட இயக்கம் தலித்துகளை உயர்த்தவில்லை என வன்னிஅரசுவை எழுத வைத்தது யார்? என்று திருமாவளவனை குற்றம் சாட்டி நேற்று வைகோ கேள்வி எழுப்பி இருந்தார்.

இதே போன்ற ஒரு கேள்வி புதியதலைமுறை சேனலின் கார்த்திகைச்செல்வன் மீண்டும் மீண்டும் வைகோவிடம் முன்வைக்க, தன் வீட்டில் வைத்து பேட்டி கொடுத்துக் கொண்டிருந்த வைகோ, அந்தக் கேள்விக்கு பதில் சொல்லாமல் எழுந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories