ராஜினாமா செய்தார் விளையாட்டுத் துறை அமைச்சர் ஓசூர் பாலகிருஷ்ண ரெட்டி!

Published:

edappadi balakrishnareddy - 2026

சென்னை: பேருந்துகள் மீது கல்வீசி சேதப்படுத்திய வழக்கில் தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் ஓசூர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் இன்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

ஓசூர் தொகுதி எம்.எல்.ஏ., பாலகிருஷ்ண ரெட்டி, கடந்த 1998ஆம் ஆண்டு, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பாகனூரில் கர்நாடக எல்லையில் கள்ளச் சாராயத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது பஸ்கள் மீது கல்வீசித் தாக்கியதாக வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் அவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்நிலையில் பாலகிருஷ்ண ரெட்டி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமா கடிதம் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத் தீர்ப்பால் பதவி பறிபோன அமைச்சர்கள்

முன்னாள் அமைச்சர் செல்வகணபதி
1995-96 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் செல்வகணபதி. இவர் அமைச்சராக இருந்தபோது சுடுகாட்டுக்கு கூரை அமைப்பதில் முறைகேடு செய்ததாக புகார்

ALSO READ:  குடிமக்களே தெய்வங்கள்: 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உருக்கம்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா
ஜெயலலிதா முதல்வராக பதவி வகித்த 1991-96-ஆம் காலகட்டத்தில் அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு

முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி
பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், அரசு சொத்துக்கு சேதம் விளைவித்தல் வழக்கு

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img