December 6, 2025, 4:55 AM
24.9 C
Chennai

மக்கள் நீதி மய்யம் தொடங்கி ஓர் ஆண்டு நிறைவு! ஆனாலும்… ரஜினியின் முடிவையே கமலும் எடுக்கிறாரா?

10 June24 Makkal kamal - 2025

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் தொடங்கி ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி கட்சி கொடியேற்றினார் கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன், தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பின்னர் திடீர் அரசியல்வாதி அவதாரம் எடுத்தார். அவ்வப்போது டிவிட்டரில் அரசியல் கருத்துகள் தெரிவித்து வந்த அவர், பின்னாளில் மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் அமைப்பைத் தொடங்கினார்.

இன்று மக்கள் நீதி மய்யம் தொடங்கப்பட்டு ஓர் ஆண்டு நிறைவு பெறுகிறது. மேலும், மக்களவைத் தேர்தலும் களை கட்டியுள்ளது. இருப்பினும், தமக்கு ஊழலுக்கு எதிரான கொள்கை உண்டு என்பதால், கறை படியாத கரங்களுடன் இணையவே காத்திருப்பதாகவும், கை கொடுத்து தம் கரத்தைக் கறையாக்கிக் கொள்ள விரும்பவில்லை என்றும் கமல் கூறிவிட்டதால், அதிமுக., திமுக., என இரு அணிகளுடனுமே கூட்டணி வைத்து தேர்தலைச் சந்திக்க இயலாமல் போனது கமல்ஹாசனுக்கு!

இந்நிலையில் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதாக கூறிக் கொண்டிருந்த கமல்ஹாசனுக்கு தற்போது மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட ஆர்வம் இல்லை என்று கூறப் படுகிறது. இந்த விவகாரத்தில் கட்சியே தொடங்காமல், அரசியல் செய்து கொண்டிருக்கும் ரஜினிகாந்த் அறிவித்து விட்டதைப் போல், தாமும் சட்டப்பேரவைத் தேர்தலில் முழு வீச்சில் களம் இறங்கலாம் என்றும், அதகாக நேரம் எடுத்துக் கொள்ளலாம் என்றும் திட்டமிட்டுள்ளதாக மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகள் கூறுகின்றனர்.

இந்நிலையில் இன்று தனது கட்சியின் ஓர் ஆண்டு நிறைவைக் கொண்டாடி வருகிறார் கமல்ஹாசன். இதை அடுத்து இன்று காலை சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் கொடி ஏற்றிப் பேசினார். அப்போது அவர், மக்கள் பலம் இருப்பதாலேயே தேர்தலில் தனித்து நிற்போம் என அறிவித்தேன். தமிழகமெங்கும் மக்கள் நீதி மய்யம் எனும் குடும்பம் பரவி உள்ளது. முதலில் தனியாக நின்றேன், இப்போது கூட்டம் கூடியிருக்கிறது. பெண்கள் ஆற்றும் உதவி, வியத்தகு உதவி என்று பேசினார். இருப்பினும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தெளிவாகச் சொல்லவில்லை!
.
தொடர்ந்து இன்று மாலை நாகை மாவட்டம் வேதாரண்யம் தொகுதி வெள்ளபள்ளம் கிராமத்தில் மீனவர்களுக்கு வலைகளை வழங்கிப் பேசும் கமல், மாலை 6.30க்கு திருவாரூரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.


உங்கள் தமிழ் தினசரி செய்திகளின் வாக்குப் பெட்டி…
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்!


[poll id=”8″]


 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories