தமாகா.,வுக்கு ஒரு தொகுதி! ஆனால்… ‘இந்த’ நிபந்தனையால் ஜி.கே.வாசன் அதிர்ச்சி!

gk vasan9 600 10 1491821923 - 2026

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு அதிமுக., கூட்டணியில் ஓர் இடம் கொடுக்க அதிமுக., தலைமை முடிவு செய்துள்ளது. அதே நேரம், இரட்டை இலைச் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்றும், சைக்கிள் சின்னத்தில் போட்டியிடக் கூடாது என்றும் விதிக்கப்பட்ட நிபந்தனையால் ஜி.கே.வாசன் அதிர்ச்சி அடைந்துள்ளார் என்கிறார்கள்!

அதிமுக பாஜக., கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையின் போதே, பாஜக., தம்முடன் உள்ள புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி, புதிய நீதிக்கட்சி ஏ.சி.சண்முகம் உள்ளிட்ட மூவருக்கு தலா ஒரு தொகுதி கேட்டது. அப்போதும், பாஜக.,வுக்கு மட்டும் ஐந்து தொகுதிகள் என்றும், மற்றவர்களுக்கு ஒரு தொகுதி கொடுப்போம், ஆனால் அவர்கள் தாமரைச் சின்னத்தில் போட்டியிடக்கூடாது, மாறாக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்றும் கூறியதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில் அதே சூத்திரத்தை தமாகா.,விடமும் விதித்ததால் அதன் தலைவர் ஜி.கே.வாசன் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

2014ல் காங்கிரஸில் இருந்து விலகி த.மா.கா., வை தூசு தட்டி மீண்டும் தொடங்கி, 2016 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்தித்தார் ஜி.கே.வாசன். ஆனால் அவர் மக்கள் நலக் கூட்டணியில் இணைந்தது பிடிக்காமல், முக்கியத் தலைவர்கள் எல்லாம் காங்கிரஸிலும் அதிமுக.விலும் இணைந்தனர். இதனால் கட்சி பெரிதும் கரைந்து போனது.,

சட்டமன்றத் தேர்தல் முடிந்ததும் மக்கள் நலக் கூட்டணியிலிருந்து விலகிய ஜி.கே.வாசன், தனித்து செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் தமாகா இடம் பெற முயற்சி மேற்கொண்டார். ஆனால், தமாகாவை கூட்டணியில் சேர்க்கக் கூடாது என ராகுல் காந்தி உறுதியுடன் கூறி விட்டதால், வேறு வழியின்றி அதிமுக கூட்டணியில் இணைய முயற்சி மேற்கொண்டார்.

தொடர்ந்து, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் வாசன் ரகசிய பேச்சு நடத்தினார். அப்போது 4 மக்களவைத் தொகுதியும், ஒரு மாநிலங்களவை இடமும் கேட்டுள்ளார். ஆனால், முதல்வர் பழனிசாமியோ, இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதாக இருந்தால் வாசன் விரும்பும் ஒரு தொகுதியை தர தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த வாசன் அடுத்து என்ன செய்வது என்று கட்சியினருடன் ஆலோசித்து வருகிறார்.


[poll id=”8″]


 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories